திருவனந்தபுரம், நவ.16- அதிர்வுதாங்கு மண்டலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்த ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைப்பது என நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கேரளாவின் சிறப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன் மொழிவு களுக்கு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய வயல்களை தவிர்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் கேரளா போன்ற மாநிலங்களின் கோரிக்கை யை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள 109 ஊராட்சிகளை சிஆர்இசட் (CRZ) 2 பிரி வில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நேமம் கோச்சிங் டெர்மினலை உருவாக்க ஒன்றிய ரயில்வே அமைச்சரை சந்தி க்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் முடிவு செய்தனர்.
ரயில் பாதையின் குறுக்கே உயர் அழுத்த மின் (இஎச்டி) பாதைகள் அமைக்க ரயில்வே யின் அனுமதி தேவை. இந்தி மொழி திணிப்பை கைவிட அழுத்தம் தருக! கண்ணூர் சர்வதேச விமான நிலையம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும், ஆசியான் நாடுகளுடன் திறந்த வானங்கள் கொள்கையின் பலன்களைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்படவேண்டும். திட்ட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவோ அல்லது மனித-வனவிலங்கு மோதலைத் தணிக்க சிறப்பு நிதியாகவோ ஒன்றிய அரசிட மிருந்து பணத்தை அனுமதிக்க அவசர கவனம் செலுத்தப்படவேண்டும். இந்தி மொழியை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் இருந்து விலக ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.