திருவனந்தபுரம், ஏப்.12- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேசனுடன் (ஐஆர்சிடிசி) இணைந்து கேரள அரசு சாலை போக்கு வரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) உல்லா சப் பயணத் தொகுப்புகளை குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்ய உள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. ஐஆர்சிடிசி தொ குப்புகளை கே.எஸ்.ஆர்.டி.சி. பட்ஜெட் டூரிசம் அலகு மூலம் பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசியில் தற்போது இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு கட்டணங்கள் இந்த தொகுப்பில் உள்ளன. திருவனந்த புரத்திலும் கொச்சியிலும் அலுவலகங்கள் செயல்படும். குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பயணத்தைத் தொடங்குவது பயணிகளுக்கு பயனுள்ள தாக இருக்கும். உலா ரெயில் நிறுவனமும் இதில் விருப்பம் தெரிவித்துள்ளது. கேஎஸ்ஆர்டிசியின் ‘பட்ஜெட் டூரிஸம்’ வெற்றிக்குப் பிறகு ஐஆர்சிடிசி ஒத்துழைக்க முன்வந்தது. எஸ்ஆர்டிசி தனது 25 பணிமனைகளில் இருந்து உல்லா சப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. விடுமுறை நாட்களில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் பத்து பணிமனை களில் இருந்து இதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான தொகுப்புகள் சில நாட்களில் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும்
கேஎஸ்ஆர்டிசி பட்ஜெட் சுற்றுலா மூலம் கர்நாடகாவிற்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் மைசூர் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்து டன் (ஆர்டிசி) இணைந்து சுற்றுலா தலங்கள் காண்பிக்கப்படும். சென்னைக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தால் ஒத்துழைக்க லாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் தெரிவித்துள்ளது.