கேரள அரசின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் திட்ட த்தை (காஸ்ப்) ஒன்றிய அரசின் திட்டமாக மாற்றி மண்டல முகாம்கள் நடத்தப்படுகின்றன. திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக உறுப்பினர் களின் வார்டுகளை மையமாக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. காஸ்ப் அதிகாரிகளுக்கு தெரியா மல் இந்த முகாம்கள் நடத்தப்படுவ தாகவும், இதன் மூலம் பெறப்படும் கார்டுகளுக்கு காப்பீடு வழங்கப்பட மாட்டாது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநகராட்சி மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற போலி அட்டைகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி எல்லையில் பாஜக கவுன்சிலர்கள் தலைமையில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆற்றிங்கலில் பல்வேறு ஊராட்சி களில் நடைபெற்ற முகாமிற்கு பாஜக வார்டு உறுப்பினர்கள் தலைமை வகித்தனர்.
அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்து முகாமை முடக்கிய சம்பவங்களும் நடந்துள் ளன. ஒரு நபரிடம் இருந்து ரூ.50 வசூலித்து ஆதார் தகவல்களை சேகரிப்பதாக போலி பிரச்சாரம் நடந்து வருகிறது.
தற்போது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பதிவு அல்லது புதுப்பித்தல் தொடர்பான எந்த அறிவிப்பையும் சுகாதாரத் துறை வெளியிட வில்லை என தெளிவுபடுத்தப்பட்டு ள்ளது.