திருவனந்தபுரம், ஜுன் 27- வயநாடு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் வன் முறையை கட்டவிழ்த்துவிட்ட எதிர்க்கட்சி கள், சட்டசபையிலும் அதை நீட்டிக்க முயற்சி செய்ததாக முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி பதில் நிகழ்ச்சி யை முற்றிலுமாக சீர்குலைத்த எதிர்க் கட்சிகள், சட்டசபையில் வன்முறையில் ஈடு பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார். சட்டப்பேரவை வரலாற்றில் இது வரை இல்லாதது இன்று நடந்துள்ளது. பிரச்சனை என்ன என்பதை சபையில் கூற எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்றும் முதல்வர் தெரிவித்தார். வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவ லகம் மீது நடந்த சம்பவத்தில் கடும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்ட விழ்த்துவிட்டன. சட்டசபையிலும் அதை தொடர முயற்சி நடந்தது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் அவசரத் தீர்மானம் எந்த சூழ்நிலையிலும் சட்டசபையில் விவாதிக் கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்தனர். அதற்காக, சட்டமன் றத்தின் நடவடிக்கை பல முறை தடை பட்டது. சபை நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைக்குமாறு சபாநாயகர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எதிர்க்கட்சிகள் செவி சாய்க்கவில்லை. சாதாரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஜனநாயக உரிமையைப் பயன் படுத்தத் தயாராக இல்லாத ஒரு எதிர்க் கட்சியை இன்று நாம் காண்கிறோம். அவர்களின் நடத்தை ஜனநாயக உரிமை களை அங்கீகரிக்காத வகையிலும், அவற்றை முற்றாக நிராகரிக்கும் வகையிலும் இருந்தது. பெரிய அளவில் சகிப்பின்மை இருந்தது. இந்த நோட்டீஸ் விவகாரத்தை சபையில் எழுப்பி, அதற்கான பதிலை முழு வதுமாக தவிர்க்க வேண்டும் என்று யுடிஎப் விரும்பியது. அதனால்தான் இவ்வாறான தொரு நிலைப்பாடு எடுக்கப்பட்டதாக ஊகிக்க முடியும் என முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.