திருவனந்தபுரம் கேரள ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுகள் மீது சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்ட அரசாங்கம், காவல்துறை தலைவரை (டிஜிபி) விசாரணை நடத்த நிய மித்தது. அவரது அறிக்கையின் மீது ஞாயி றன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பி னர் பி.வி.அன்வர் ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் மீது சில தீவிரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதையடுத்து, காவல்துறை அதிகாரி கள் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் தனது நிலைப்பாட்டை விளக்கினார். காவல் துறையின் ஊழல்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு கள் குறித்து மாநிலத்தின் உயர் அதிகாரி விசாரணை நடத்துவார் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
அன்வரின் புகார் மற்றும் ஏடிஜிபியின் கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 2ஆம் தேதி காவல்துறைத் தலைவர் டாக்டர். ஷேக் தர்வேஷ் சாஹிப் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. குற்றம் சுமத்திய எம்எல்ஏ மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணையின் போது அளித்த வாக்குமூலத்தில் பி.வி.அன்வர் ஏடிஜிபி மீது நிதி முறைகேடு குறித்த குற்றச் சாட்டுகளையும் எழுப்பியிருந்தார்.
இவ்விவகாரங்கள் விஜிலென்ஸ் விசார ணையில் இருப்பதாக அரசுக்கு அளித்த அறிக்கையில் காவல்துறை தலைவர் தெரி வித்தார். செப்டம்பர் 19ஆம் தேதி, எம்.ஆர்.அஜித்குமார் மற்றும் பத்தனம்திட்டை முன்னாள் எஸ்பி சுஜிதாஸ் மீதும் விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்படும் என அரசு அறி வித்தது. குற்றப்பிரிவு எஸ்பி ஜோன்குட்டி தலை மையில் விஜிலென்ஸ் விசாரணையும் நடை பெற்று வருகிறது.