states

img

வயநாட்டில் அடையாளம் காணப்படாத 71 சடலங்கள்

திருவனந்தபுரம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண் ணிக்கை 400ஐ நெருங்கி யுள்ள நிலையில், காணாமல் போன 180க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து 7ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவு பேரழி வில் பலி எண்ணிக்கை 400ஐ நெருங்கியதாக தகவல் வெளியாகி வந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின்  தகவலின்படி 222 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 222 உடல்களில், 161 உடல்களுக்கு உடற்கூறாய்வு நிறைவடைந்துள் ளது. இதில் 97 ஆண்கள், 88 பெண்கள், 37 குழந்தைகள் உள்ள நிலையில், 135 உடல்கள் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே போல 181 உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் 132 உடல் உறுப்புகள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. அடையாளம் தெரியாத மற்றும் யாரும் உரிமை கோராத 71 உடல்களை புத்துமலையில் உள்ள ஹாரிசன் மலையாளம் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

91 பேர் சிகிச்சையில்...

நிலச்சரிவில் சிக்கி 91 பேர் வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வயநாடு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

7ஆவது நாளாக  தொடரும் மீட்புப் பணி

வயநாடு பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி 7ஆவது நாளாக தொடர்ந்து நடை பெற்று வரும் நிலையில், மீட்புப் பணி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் வரை தொடரும் என மீட்புப்பணிக்குழு அறிவித்துள் ளது. கேரள அமைச்சர்கள் எம்.பி. ராஜேஷ், பி.ராஜீவ், அமைச்சரவை துணைக்குழு உறுப்பினர்கள் கே.ராஜன், பி.ஏ.முகமது ரியாஸ், ஓ.ஆர்.கேளு, ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் இந்திரபாலன் தலை மையில் ஆறு பகுதிகளாகப் பிரிக் கப்பட்டு பணிகள் நடைபெறு கின்றன. பல்வேறு படைகளில் 1,382 வீரர்களும், 1,700 தன்னார்வ லர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து மேலும் மூன்று மோப்ப நாய்கள் திங்க ளன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு வந்துள்ளன. நிலத்தின் அமைப்பை அறியும் பழைய மற்றும் புதிய வரைபடத்தை பயன் படுத்தி, மண் சரிந்துள்ள இடத்தில் தேடப்படும் என ராணுவம் மற்றும் மீட்புக்குழு அறிவித்துள்ளது. முண்டக்கையில் ஞாயிறன்று ராடார் ஆய்வு நடத்தப்பட்டது. ஐபி ஓடி ஆய்வு புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலத்திற்கு அருகில் இரண்டு இடங்களைக் கண்டறிந்து உடல் சிக்கி இருப்பதற்கான தக வல்களை வெளியிட்டுள்ளது.

தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு

நிலச்சரிவால் உருக்குலைந் துள்ள வயநாட்டில் மறு வாழ்வு நடவடிக்கை களில் பங்கேற்க விரும்பும் அமைப்புகள் விண்ணப்பிக்க லாம் என அம்மாவட்ட ஆட்சி யர் அறிவிப்பு வெளியிட்டுள் ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மேகாஸ்ரீ வெளியிட்ட அறிவிப்பில்,”வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்க லாம். பேரிடர் நிவாரண நடவ டிக்கைகள், மறுவாழ்வு நடவ டிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர், பதிவு செய்ய விரும்புவோர் கூகுள் படிவ இணைப்பு மூலம் விண்ணப்பிக் கலாம். விண்ணப்பிக்கும் நபர் கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக் கேற்ப அழைக்கப்படுவர்” என அவர் கூறியுள்ளார்.

தொற்றுநோய் பரவும் அபாயம்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தல்

வயநாட்டில் நிலச்சரிவு பேரழிவை தொடர்ந்து சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி மற்றும் சாலி யாறு கரையில் உள்ள பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதா ரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வீணா ஜார்ஜ் மேலும் கூறுகையில்,”வயநாடு மாவட்டத்தில் கேரள சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவு உரு வாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவந்து  உடற்கூறாய்வு செய்யும் இடத்தில் காவல்துறை, சுகாதார பணியாளர்கள், தன்னார்வ லர்கள் மட்டுமே இருக்கவேண்டும். மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், டாக்ஸி ப்ரோபிலக்ஸிஸ்  (Doxy prophylaxis) வகை தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மீட்புப் பணி நடைபெறும் பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என  அறிவுறுத்தியுள்ளார்.

4 ஆண்டுகள் கடந்தும் பெட்டிமுடி நிலச்சரிவுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பீடு வழங்காத மோடி அரசு

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 6 அன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து செவ்வாயன்றுடன் (ஆக., 6) 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்க ளுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் கேரள மாநில அரசு அறிவித்த நிவாரண நிதி இன்று வரை மறுவாழ்விற்கு உதவியாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் என மூன்றரை கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியுள்ளது. காய மடைந்தவர்களின் மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டது. குறிப்பாக குற்றியார் கணவாயில் கண்ணன் தேவன் நிறுவனத்தின் உதவி மற்றும் கேரள அரசின் நிவாரண பங்களிப்பில் இருந்து  8 குடும்பங்க ளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. பேரழிவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் பெட்டிமுடியில் அனைத்து மறுவாழ்வு பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் உயிரிழந் தோர் குடும்பத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மோடி அரசின் இந்த அரசியல் பாரபட்சத்திற்கு கண்டனங் கள் குவிந்து வருகின்றன. தற்போது வயநாடு சம்பவத்தை தேசிய பெரிடராக அறிவிக்க கேரள அரசு, நாடாளுமன்றத்தில் சிபிஎம் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ள னர். இதற்கும் ஒன்றிய அரசு பதில் அளிக்கா மல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.