states

img

பிறந்து 4 நாளே ஆன குழந்தை மூளைச்சாவு: உடலுறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஹர்ஷ்பாய், சேத்தன்பென் சங்கானி தம்பதி. இவர்களுக்கு கடந்த அக்டோபர் 13 அன்று  ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த  குழந்தை பிறந்தது முதல் எந்த அசைவை யும் காட்டவில்லை. அழவும் இல்லை. இதை யடுத்து குழந்தை யை மருத்து வர்கள் சிறப்பு மருத்து வமனைக்கு மாற்றி, வெண்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சைகள் அளித்தும், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதனை கேட்ட ஹர்ஷ்பாய், சேத்தன்பென் கதறி துடித்த னர். குழந்தையின் உடலுறுப்புகள் மூலம்  பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க லாம் என்று பக்குவமாக தம்பதியிடம்  உணர்த்தி, குழந்தையின் உறுப்புகளை தானமாக அளிக்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்கள் குழந்தை யால் பல குழந்தைகளின் பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த அந்த தம்பதி தங்க ளது குழந்தையின் உடலுறுப்புகளை தானம் அளிக்க ஒப்புக்கொண்டனர். பிறந்து 4 நாட்களே ஆன அந்த குழந்தை யிடமிருந்து, இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள், கல்லீரல், மண்ணீரல்  உள்ளிட்ட மிக முக்கிய உறுப்புகள் தான மாகப் பெறப்பட்டுள்ளன. இதில், சிறுநீர கங்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும், கல்லீரல் தில்லியில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறிய குழந்தை யிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெற்றி ருப்பது இதுவே முதல் முறை என்று மருத்து வர்கள் கூறுகிறார்கள்.