குஜராத் மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டில்ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்கா ணிப்பாளராக சஞ்சீவ் பட் பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை காரணமாக பீகார் மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அத் வானி கைதை கண்டித்து குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடு பட்ட 150க்கும்மேற்பட்டோரை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பட் கைது செய்தார். கைது செய்யப் பட்டு விடுவிக்கப்பட்ட பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணவி என்பவர் 10 நாட்களுக்குப் பின் மருத்துவமனை யில் உயிரிழந்தார். பிரபுதாஸ் மர ணத்திற்கு சஞ்சீவ் பட் மற்றும் பிற காவல் அதிகாரிகளே காரணம் என அவரது சகோதரர் வழக்கு தொ டுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சஞ்சீவ் பட், பிரவின்சிங் ஜாலா ஆகிய இரு காவல் அதிகாரிகளு க்கு ஆயுள் தண்டனை வழங்கியது ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று (டிசம்பர் 7) பிரபுதாஸ் மாதவ்ஜி வழக்கில் சஞ்சீவ் பட்டிற்கு எதிராக போதுமான அரசு தரப்பு ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக போர்பந்தர் நீதிபதி முகேஷ் பாண்டியா தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு மூலம் முந்தைய குஜராத் பாஜக அரசின் மற்றும் மோடி அரசின் பொய் அம்பலமாகியுள்ளது.
சஞ்சீவ் பட் மீது பாஜக சதி வழக்கு
ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சஞ்சீவ் பட் 1990ஆம் ஆண்டு இந்துத்துவா கும்பல் நிகழ்த்திய வன்முறையை (ஜாம்நகர்) தடுத்தது மற்றும் குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த பொழுது 2002-ஆம் ஆண்டு நடந்த கோத்ரா மதவன்முறை அம்பலப்படுத்திய தற்காக பாஜக -ஆர்எஸ்எஸ்காரர்க ளால் முக்கிய எதிரியாக குறி வைக்கப்பட்டவர்.
ஜாம்நகர் வன்முறையை தடுத்ததற்காக 1996இல் குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் சஞ்சீவ் பட்டிற்கு பல்வேறு நெருக்கடி கொடுத்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தான் பிரபுதாஸ் மாதவ்ஜி வழக்கு விசாரணை தீவி ரப்படுத்தப்பட்டது. மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாலன்பூர் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட வழக்கும் தொடரப்பட்டது.
மோடியை திணற வைத்த சஞ்சீவ் பட்
பின்னாளில் குஜராத் கோத்ரா வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, கலவரத்திற்கு முதல்வர் மோடி உடந்தையாக இருந்ததாக சஞ்சீவ்பட் பகிரங்க மாக குற்றம் சாட்டினார். மேலும் 2011 ஏப்ரல் மாதம் மோடிக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். முஸ்லிம் மக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வகுப்புவாதக் கல வரம் நடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் மோடி,“வன்முறை யில் ஈடுபடும் நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண் டாம்” என்று மாநில காவல்துறை க்கு அறிவுறுத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்க ளில் தானும் ஒருவர் என்று உண் மையைப் போட்டுடைத்தார்.
பிரதமர் பதவியால் தப்பித்த மோடி
2014ஆம் ஆண்டு மோடி பிரத மர் ஆனார். அதன்பிறகு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த நீதி மன்றமே, கோத்ரா வழக்கில் பிரத மர் மோடியை குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் சஞ்சீவ் பட்டின் ஜனநாயக போ ராட்டம் வலுவிழந்தது.
ஒன்றிய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் மோடி கைக்கு செல்ல, கோத்ரா வழக்கில் எதிராக சாட்சியம் அளித்த சஞ்சவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியது மோடி அரசு. அவர் மோடிக்கு எதிராக போலி ஆதா ரங்கள் சமர்ப்பித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் சஞ்சீவ் பட் காவல்துறை சேவையிலிருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1990- ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபுதாஸ் மாதவ்ஜி காவல் நிலைய மர ணத்திற்கு சஞ்சீவ் பட் காரண மாக்கப்பட்டு கைது நடவடிக்கை க்கும் உள்ளாக்கப்பட்டார். இவ் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞரை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க முயன்றதாகவும், கடந்த 1997-ஆம் ஆண்டு ஜாதவ் என்பவரை போலீஸ் காவலில் வைத்து துன்புறுத்தியதா கவும் அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை (போதைப்பொருள் வழக்கு மட்டும்) விதிக்கப்பட்டது.
அச்சத்தில் பாஜக
தற்போது ராஜ்கோட் சிறையில் இருக்கும் சஞ்சீவ் பட்டுக்கு எதி ராக அரசு தரப்பு போதிய ஆதாரம் வழங்காததால், போலீஸ் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து அவரை விடுவித்து போர்பந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் பாலன்பூர் போதைப்பொ ருள் வழக்கில் சஞ்சீவ் பட் 20 வருட தண்டனையை அனுபவித்து வருவதால் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆக முடியாது.
பிரபுதாஸ் மாதவ்ஜி வழக்கைப் போன்று, பாலன்பூர் வழக்கிலும் சஞ்சீவ் பட்டை குற்றமற்றவர் என நிரூபித்து அவரை சிறையில் இருந்து விடுதலை செய்வோம் என அவரது வழக்கறிஞரும், நெருக்க மானவர்களும் கூறியுள்ளனர். 61 வயதாகும் சஞ்சீவ் பட் சிறையில் இருந்து விடுதலையானால் குஜராத் கலவரம் முதல் மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது ஆட்சியில் நிகழ்ந்த வகுப்புவாத சம்பவங்களை வெளிப்படுத்தி, மோடிக்கு எதி ராக நேரடி அரசியலில் ஈடுபடலாம் என்பதால் பாஜக அச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.