2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில், 2 குழந்தைகள் உள்பட 17 இஸ்லாமியர்களை கொலை செய்த குற்றவாளிகள் 22 பேரை விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, குஜராத் மாநிலத்தில் பயங்கர வன்முறை வெடித்து. இதில் 2 குழந்தைகள் உள்பட 17 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டு, சாட்சியங்களை மறைக்கும் வகையில் அவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டதாக வழக்கப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 22 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.