2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலை களின் போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலரை கொடூரமாக கும்பல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுவித்த உத்தரவை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.இது குஜராத் மாநில அரசின் மீதான தெளிவான குற்றச்சாட்டாகும்.
குஜராத் அரசின் அவமானகரமான செயல்!
பில்கிஸ் பானு வழக்கில் விசாரணை குஜராத் காவல்துறையினரிடமிருந்து மத்திய புலனாய்வு க்கு மாற்றப்பட்டு, விசாரணைக்குப் பிறகு மும்பைக்கு மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குஜராத் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் அவர்களின் முன்கூட்டிய விடு தலையை எளிதாக்கியது. அது மட்டுமின்றி ஆதரவாளர்களை வைத்து அவருக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம் நடத்திய ஒரு அவமானகரமான செயல் தற்போது முடி வுக்கு வந்துள்ளது.இரண்டு வாரத்திற்குள் அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்கு மாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குற்றவாளிகளுக்கு உடந்தையாக!
மகாராஷ்டிராவில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்து முடிவெடுக்க குஜராத் மாநிலத்திற்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவர் தங்களின் மீது உள்ள வாழ்நாள் முழுவதற்குமான தண்டனை யிலிருந்து (காலாவதியான 1992 விதிமுறை களின் படி) விடுவிப்பு கோரி அளித்திருந்த மனுவில் குஜராத் மாநில அரசு உடந்தையாக இருந்து அதற்கு இசைவாகவும் செயல்பட்டு அவர்களை விடுவித்துள்ளது என்று நீதிபதி கள் பி .வி. நாகரத்னா மற்றும் உஜால் புயான் அடங்கிய நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. விசாரணை நடத்தி தண்டனையும் வழங்கிய மகாராஷ்டிரா அரசு தான் மன்னித்து விடு விப்பு அளிக்க கூறும் மனுவை கருத்தில் கொள்ள பொருத்தமானது என்ற முந்தைய நடவடிக்கைகளின் போது சரியான நிலை எடுத்த குஜராத் அரசு, திட்டவட்டமான உண்மைகளை மறைத்து தவறான முடிவுக்கு வந்த நிலையில், மே 22 இல் வெளியான 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தவறிவிட்டது. குற்றவாளிகளை விடுவித்து அவர்களுக்கு ஆதரவாக உத்தரவுகள் பிறப்பிக்க இந்த நீதிமன்ற உத்தரவே காரணம் என்று கூறுவது அதிகாரத்தை தவறாக அபகரித்துள்ள செயல் என்று குஜராத் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்கும் தீர்ப்பு!
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான ஒரு அடியாக இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. தகுதியின் அடிப்படையில் நிவாரணம் வழங்கு வதற்கான அதிகாரத்தை பயன்படுத்தும் பொழுது மிகவும் அடிப்படையான கொள்கை களுக்கு உட்பட்டு அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட குற்றம் சமூகத்தை பெருமள வில் பாதித்ததா, குற்றவாளி இதே போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடுவாரா அல்லது மனம் திருந்தி வாழ்வாரா என்பது போன்ற தொடர்புடைய அம்சங்களின் அடிப்படையில் விடுவிப்பு இருக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகள், 14 ஆண்டுகளுக்கும் குறையாத சிறை தண்டனைக்குப் பிறகும் விடுதலை செய்யப்படாவிட்டால் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிப்பார் கள் என்று எதிர்பார்க்கப்படும் போது அவர்க ளுடைய வழக்குகள் தனித்தனியாகத் தான் விசாரணைக்கு உட்படுத்தப்படும். பாதிக்கப்பட்ட வர்கள், உயிர்பிழைத்தவர்கள் மற்றும் சமூ கத்திற்கு அவர்களால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி எல்லாம் கவலைப்படா மல் சர்வ சாதாரணமாக அவர்களை விடுதலை செய்யக்கூடாது.
பகுத்தறிவின் அடிப்படையில் ஆன எந்த ஒரு நிவாரணக் கொள்கையும் விடுவிப்பும் குற்றவாளிகள் சட்டத்தின் ஆட்சியை மதித்து சமூக நலனுக்கு ஊறு விளைவிக்காமல் மனம் திருந்தி வாழ்வார்களா என்பது போன்ற மனிதாபிமான பரிசீலனைக்கு உட்பட்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முன் நிபந்தனை அம்சங்களும் எச்சரிக்கைகளும் எதுவும் இந்த விடுவிப்பில் பின்பற்றப்படவில்லை.
தி இந்து (ஆங்கிலம்) தலையங்கம் (9/1/2024), தமிழில்: கடலூர் சுகுமாரன்