states

img

கர்நாடகாவில் சோகம் லாரி கவிழ்ந்து 6 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது நெலமங்களா. இந்த பகுதியில் உள்ள நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்த கண் டெய்னர் லாரி கவிழ்ந்து அருகில் சென்ற கார் மீது விழுந்தது. கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தை கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி கோவிலுக்கு சென்று ஊருக்கு திரும்பும் போது புல்ல சமுத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் அதிவேகத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த கோர விபத்தில் பிரேம் குமார் (30), அதர்வா (2), ரத்னம்மா (70), மனோஜ் (32) ஆகிய 4 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.