சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட புகாரில் கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரேணுகாசாமி என்பவரின் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சிறையிலிருந்து கொண்டு அவர் வீடியோ காலில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்த 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்தும், தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றவும் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.