கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி யான தேவரா ஹிப்பராகி நகரில் தோராயமாக 80% முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். வெள்ளியன்று பாஜக - ஆர்எஸ்எஸ் மற்றும் இதர இந்துத் துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தி ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் “ராமர் அரிசியை (மந்திர அக்சதை)” தேவரா ஹிப்ப ராகி நகரின் குறிப்பிட்ட பகுதி களில் விநியோகம் செய்துள்ளனர்.
முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் “ராமர் அரிசி” விநியோகம் என்ற சர்ச்சைக்கு மத்தியில், தேவரா ஹிப் பராகி நகரின் ஒவ்வொரு தெரு விலும் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டு இந்துத்துவா அமைப்புகள் வன் முறையை தூண்டியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த இந்த பகுதியில் ஏன் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்புகிறீர்கள் என முஸ்லிம் அமைப்புகள் கேள்வி கேட்க, இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிய அள வில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பிரச்சனையை திசை திருப்பும் வித மாக முஸ்லிம்கள் தங்களை தாக்கி யதாக இந்துத்துவா குண்டர்கள் காவல்துறையில் புகார் அளித்த னர். இதனை அடுத்து விஎச்பி, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத் துவா அமைப்புகள் தேவரா ஹிப்ப ராகி நகரின் அனைத்து பகுதிகளி லும் “மந்திர அக்சதை” அரிசியை விநியோகம் செய்வதாக சனியன்று அறிவித்தனர். இதனால் தேவரா ஹிப்பராகி நகரில் பதற்றமானச் சூழல் நிலவியது.
பதற்றத்தை தணித்த போலீசார்
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இந்துத்துவா குண்டர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளை அழைத்து கூட் டத்தை நடத்தி,”வன்முறையை அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதி மொழி வாங்கி அனுப்பினர். போலீ சாரின் சாமர்த்தியத்தால் தேவரா ஹிப்பராகி நகரில் பதற்றம் குறைந்து இயல்புநிலை மீண்டும் திரும்பியது.
வன்முறையை தூண்டவே
தேவரா ஹிப்பராகி நகரில் “ராமர் அரிசி” விநியோகம்
“மந்திர அக்சதை” என்பது அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித அரிசி என்று கூறப்படு கிறது. இந்த அரிசியை ஆர்எஸ்எஸ் - பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கர்நாடக மாநி லத்தில் பிரசாதமாக விநியோகம் செய்வதாக இதுவரை சாதா ரண செய்தியாக கூட தகவல் வெளி யாகவில்லை. ஆனால் முஸ்லிம் கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஜயபுரா மாவட்டத்தின் தேவரா ஹிப்பராகி நகரில் வன்முறையை தூண்டவே ஆர்எஸ்எஸ் - பாஜக உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் “மந்திர அக்சதை” அரிசியை விநி யோகம் செய்துள்ளது தெளிவாக புரிகிறது. தேவரா ஹிப்பராகி நகர முஸ்லிம்கள் “மந்திர அக்சதை” அரிசி விநியோகத்தை மதநல்லி ணக்க முறையில் கண்டுகொள்ளா மல் இருந்தனர். அதன்பிறகே “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷங்களை எழுப்பி வன்முறையை தூண்டும் முனைப்பில் பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.