கர்நாடகாவில் சிறுத்தை நடமாட்டத்தால் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜாதவ் நகரில் வெள்ளியன்று தொழிலாளியை சிறுத்தை தாக்கியது. இந்நிலையில் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி சித்தராயி மிராஜ்கரின் தாய் சாந்தா(65) மகன் தாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். மகன் இறந்து விட்டதாக தாய் நினைத்த நிலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிர்பிழைத்துள்ளார்.
இதற்கிடையே சிறுத்தை நடமாட்ட அபாயத்தை கருத்தில் கொண்டு கோல்ப் மைதானத்தை சுற்றி உள்ள 11 பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கிடையே சிறுத்தையை பிடிக்க வனத்துறை மற்றும் காவல்துறையினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதே சமயம் தெற்கு கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கடதேவனகோட் நகரில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளை தாக்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அங்கும் சிறுத்தைகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.