states

img

கர்நாடகாவில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடம் மீது தாக்குதல்

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்  நாடு முழுவதும் வன்முறையை கிளப்ப ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவில் இந்துத் துவா கும்பல் தீவிரமாக களமிறங்கி யுள்ளது. பாஜக ஆளும் ராஜஸ்தான்  மாநிலத்தில் வன்முறையை தூண்  டும் முனைப்பில் இஸ்லாமியர் களுக்கு வீடு அளிக்கக் கூடாது என்று கூறியது. மாட்டிறைச்சி விற்று  பிழைப்பு நடத்திய தலித் மக்களின் வீடுகளை இடித்தது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் ஆளும் கர் நாடக மாநிலத்திலும் மத வன்முறையை கட்டவிழ்த்து விடும் முனைப்பில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடம் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 28 அன்று ராமநகரில் கிறிஸ்தவ பிரா ர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது, தேவா லயத்தின் ஜன்னல் வழியாக இந்துத்துவா கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது. இந்த சம்பவத்தில் தேவாலயம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சம்பவம்  நிகழ்ந்து ஒரு வார காலம் ஆன பின்பும் ராமநகரில் பதற்ற மான சூழலே நிலவி வருகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு ஜனவரி 24 அன்று கர்நாடகா வின் பிஜப்பூரில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்துத்துவா கும்பலால் கிறிஸ்தவ தம்பதியினர் கொடூர மாகத் தாக்கப்பட்டனர்.