ஒடிசாவில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை தொடங்கினாலும், வட இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுகிறது.
இந்த நிலையில், ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் வெயில் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனிடையே, மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 20 பேர் பலியானதாக, அம்மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பலாங்கிர், சம்பல்பூர், ஜார்சுகுடா, கியோஞ்சர், சோனேபூர், சுந்தர்கர் மற்றும் பாலசோர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெயிலால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் எனவும், அதேசமயம் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.