பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநி லத்தின் ருத்ராபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலிய ராக பணிபுரிந்து வந்த இளம்பெண், தனது குடும்பத்துடன் உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள பிலாஸ்பூர் - காஷிபூர் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இளம்பெண்ணுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ள நிலை யில், கடந்த ஜூலை மாதம் 30 அன்று செவிலியர் திடீரென மாயமானார். ருத்ராபூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 8 அன்று உத்தரப்பிரதேச மாநி லம் திப்திபா கிராமத்தில் செவிலியர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்த ரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த தர்மேந்திரா என்பவரை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து போலீசார் கைது செய்துள்ளனர். செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தர்மேந்திராவிடம் ருத்ராபூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, உத்தரகண்டிலும் மருத்துவ செவிலியர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.