states

img

சேலையை எடுக்க 10வது தளத்தில் இருந்து மகனை கீழ் இறக்கிய பெண் - அதிர்ச்சி வீடியோ வைரல்

அரியானாவில் 10வது தளத்தில் வசிக்கும் பெண் 9 வது தளத்தில் விழுந்த தன் சேலையை எடுக்க மகனை துணியில் கட்டி இறக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
அரியானாவின் பரிதாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் பல உள்ளன.  இதில், 10வது தளத்தில் வசிக்கும் பெண்ணின் சேலை 9வது தளத்தின் பால்கனியில் விழுந்துள்ளது.  அதேசமயம் 9வது தளத்தின் வீடு பூட்டியிருந்தது. இதனால், அவர் தனது மகனை போர்வை ஒன்றால் கட்டி கீழே இறக்கி உள்ளார்.  அந்த பையனும் அதன் வழியே 9வது தளத்திற்கு சென்று சேலையை எடுத்துள்ளான். பின் சிறுவனை, அந்த பெண் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் மேலே தூக்கியுள்ளார்.  இந்த வீடியோவை எதிர்ப்புறத்தில் இருந்த குடியிருப்பில் வசித்து வரும் நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.பி.எஸ். அதிகாரி திபன்ஷு கப்ரா டுவிட்டரில் வெளியிட்டு , இந்த வீடியோ திகைக்க வைக்கிறது. கவனக்குறைவு, உணர்வின்மை மற்றும் பொறுப்பற்ற தன்மையின் உச்சங்கள். தன் குழந்தையின் உயிரைப் பணயம் வைக்க அந்த பெண்ணிற்கு உரிமை இல்லை என கூறி உள்ளார்.