states

img

மாட்டிறைச்சிக்குத் தடை அசாமில் பதற்றமான சூழல்

பாஜக ஆளும் அசாம் மாநிலத் தில் முதல்வராக இருக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா புதன்கிழமை அன்று மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுவ தாக அறிவித்தார். 

அசாம் மாநில அமைச்சரவைக் கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப் படுகிறது. கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ., சுற்ற ளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிக ரிக்க முடிவு செய்துள்ளோம். இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்குட்பட்டு (3 ஆண்டுகள் வரை சிறை) தண்டிக்கப் படுவர்” எனக் கூறினார்.

பதற்றம்

பாஜக அரசு தடை விதித்தாலும் தடை யை மீறி  மாட்டிறைச்சி உண்ணுவோம் என  முஸ்லிம் மற்றும் தலித் அமைப்பு கள் கூறியுள்ளன. இதனால் அசாம் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசாம் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்ற னர் என்பது குறிப்பிடத்தக்கது.