கவுகாத்தி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. 2026ஆம் ஆண்டு நடை பெறவுள்ள அசாம் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் தன்னை முதல்வர் வேட்பாள ராக அறிவிக்கும் வகையில் மாநிலத்தில் முஸ்லிம் இளை ஞர்களை குறிவைத்து என் கவுண்டர் மற்றும் குழந்தை திருமணம் என்ற பெயரில் கைது நடவடிக்கை, மாட்டி றைச்சிக்குத் தடை என இந் துத்துவா நிகழ்ச்சி நிரலை தீவிரமாக அமல்படுத்தி வரு கிறார்.
ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் குழந்தை திருமண தடுப்பு நட வடிக்கை என்ற பெயரில் 4,515 வழக்குகள் மூலம் 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம் இளைஞர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கையின் போது முஸ்லிம் இளைஞர் கள் பலர் படுகாயமடைந்த னர். அதே போல 6 மாதத் திற்கு முன்பு நடைபெற்ற இரண்டாம் கட்ட குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை யில் 915 பேர் கைது முஸ்லிம் இளைஞர்கள் செய்யப்பட்ட னர்.
இந்நிலையில், தொட ர்ந்து மூன்றாம் கட்ட குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை யை ஹிமந்தா பிஸ்வா சனிக் கிழமை தொடங்க உத்தர விட்டார். இந்த உத்தரவின் பேரில் சனிக்கிழமை மாலை வரை 416 பேர் கைது செய் யப்பட்டனர். 335 வழக்கு களும் பதிவு செய்யப்பட்ட தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. கைது செய்யப்பட் டவர்கள் அனைவரும் முஸ்லிம் இளைஞர்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அசாம் மாநிலத் தில் பெரும்பாலான இடங்க ளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.