வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமில் கடந்த ஒரு மாத காலமாக கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மிகப்பெரிய நதி களில் ஒன்றான பிரம்மபுத் திரா அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது. பிரம்மபுத்திராவின் 5 துணை நதிகளிலும் பெரும் வெள் ளம் பாய்ந்து வருவதால் மாநிலத்தின் 30 மாவட்டங் கள் வெள்ள நீரில் மிதந்து வருகின்றன.
இந்த கனமழை வெள் ளத்தால் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள நிலையில், 150 கிராமங்க ளும், 68,768 ஹெக்டேர் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், 15.49 லட்சம் விலங்குகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும், காணாமல் போனதாகவும், காசிரங்கா தேசிய சரணாலயத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
இந்நிலையில் வெள்ளம், நிலச்சரிவு, இடி-மின்னல் என பல்வேறு சம்பவங்க ளால் அசாம் மாநிலத்தில் கன மழைக்கு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. சனிக் கிழமை நிலவரப்படி பலி எண்ணிக்கை 64 ஆக இருந்த நிலையில், ஞாயிறன்று சரேடி யோவில் இருவர், கோல் பாரா, மோரிகான், சோனிட் பூர் மற்றும் டின்சுகியா மாவட் டங்களில் தலா ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர்.
23 லட்சம் பேர்
அசாம் முழுவதும் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக் களுக்காக மொத்தம் 577 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதில் வெறும் 53,429 பேர் தஞ்சம டைந்து நிவாரணம் மற்றும் உணவு பெற்று வரும் நிலை யில், மீதமுள்ள 23 லட்சம் பேர் உணவின்றி தவித்து வரு கின்றனர். வெள்ளத்தால் அசாம் மாநிலமே உருக் குலைந்த நிலையில், போர்க் கால அடிப்படையில் மோடி அரசு எந்தவித பேரிடர் கால நடவடிக்கை மேற்கொள்ளா தது கடும் கண்டனத்தை ஏற் படுத்தியுள்ளது.