states

img

பாஜக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் ஹரியானா மக்கள் முதல்வர் நயாப் சிங் சைனிக்கு எதிராக கருப்புக் கொடி

சண்டிகர் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்., 5 அன்று ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவை தேர்தல் போல சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தி லும் பாஜக வேட்பாளர்களை ஹரியா னா மாநில விவசாயிகள், மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். தில்லி - ஹரியானா எல்லையில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தின் பொழுது, விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், அக்னி பாதை, வேலை யில்லா திண்டாட்டம், வினேஷ் போகத் விவகாரம் போன்ற பிரச்சனைகளால் கொதித்தெழுந்துள்ள ஹரியானா மக்கள் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பா ளர்களை விரட்டியடித்து வரு கின்றனர்.

ஓட்டம் பிடித்த பாஜக முதல்வர்

வெள்ளியன்று ஹரியானா பாஜக முதல்வர் தனது சொந்த தொகுதி யான கர்னலின் லட்வா பகுதியில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற் றார். அப்பொழுது ஹரியானா மக்கள், “இங்கே எதற்கு வந்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி கருப்புக் கொடி காட்டி னர். இதனால் சைனி விரைவிலேயே பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சண்டிகருக்கு ஓட்டம் பிடித் தார். இதே போல அம்பாலாவில் முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான அனில் விஜி னின் பிரச்சாரக் கூட்டத்திற்கு விவசாயி கள் கருப்புக் கொடியுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அனில் விஜி னின் பிரச்சாரக் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப் எல்லைக்குச் செல்லவே அஞ்சும்  பாஜக வேட்பாளர்கள்

ஹரியானா மாநிலத்தின் பஞ்சாப் எல்லைப் பகுதியான சிர்சா, பாட்டியா பாத், தோஹானா, கைதால், அம்பாலா, சண்டிகர் மண்டலப் பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யவே பாஜகவினர் அஞ்சுகின்ற னர். கடந்த பிப்ரவரி மாதம் தில்லி - ஹரியானா எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் பொழுது பஞ்சாப் மாநிலத்தின் இளம் விவசாயி சுப்கரன் சிங் மோடி அரசால்  சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து ஹரியானா - பஞ் சாப் எல்லைப்பகுதியில் வசிக்கும் விவ சாயிகள் பாஜக மீது கடும் கோபத் தில் உள்ளனர். ஏற்கெனவே சிர்சா சட்ட மன்ற தொகுதியின் பாஜக வேட்பா ளரை விவசாயிகள் விரட்டியடித்ததால், பஞ்சாப் மாநில எல்லைப் பக்கமே ஹரியானா பாஜக வேட்பாளர்கள் செல்ல பயப்படுகின்றனர்.

தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்ய விடாமல் விரட்டியடிப்பது தொடர் கதையாக உள்ள நிலையில், மக்களவை தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் பிரச்சாரம் செய்யாமல் பாஜக வேட்பாளர்கள் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.