states

img

உர விலையை உயர்த்த திட்டமிட்டு தட்டுப்பாட்டை உருவாக்கும் மோடி அரசு

ஹரியானா, பஞ்சாப் மாநி லங்களில் உரத் தட்டுப் ்பாடு கடுமையாக உள்ளது. இந்த உரத்தட்டுப்பாடு நெல் உற்பத்தியைப் பாதிக்கி றது. இதனால் வரும் காலங்க ளில் கோதுமை பயிரிடுவது  தாமத மாகும். எனவே உரத்தட்டுப்பாட் டைப் போக்க உரிய நடவடிக்கை வேண்டுமெனக் கோரி விவசாயி கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ளது புன்னா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோதுமை பயிரிட ஆர்வமாக உள்ளனர். அதனால் கோதுமை பயிரிடுவதற்கு முதற் கட்டமாக தேவைப்படும் டை அமோ னியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்திற் காக (பிரதான் மந்திரி கிசான் சம் ரித்தி கேந்திரா) அரசின் உரக் கிட்டங்கிக்கு தினம்தோறும் அலையாய் அலைந்துகொண்டி ருக்கின்றனர். சைக்கிள்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் உரக்கிட்டங்கி க்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். காலை முதலே வந்து  காத்திருந்தாலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கடைசி யில் உரமூடை இல்லை என்ற  பதிலைக் கேட்டு விவசாயிகள் விரக்தியுடன் வீடு திரும்புகின்றனர்.

அரசு கிட்டங்கியில் இருப்பு இல்லை, தனியார் கடைகளில் தாராளம்

உரக்கிட்டங்கியில் பணியாற் றும் ஊழியர் ஒருவர், எங்களிடம் டிஏபி இருப்பு இல்லை. ஆனால், ஏராளமான விவசாயிகள் டிஏபி-யையே கேட்டு வருகிறார்கள் என்றார்.  புன்னா கிராமத்தைச் சேர்ந்த  வயதான ரகுவீர் சிங் (50)  கூறு கையில், தாம் 14 நாட்களாக டிஏபி உரத்திற்காக அலைந்து கொண்டி ருக்கிறேன். அதிகபட்சம்  நான்கை ந்து நாட்களில் கோதுமையை விதைத்தே ஆக வேண்டும். அத னால் அரசு மூலம் உரம் கிடைக்கா விட்டால், தனியார் கடைகளில் வாங்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார். டிஏபி உரம் கிடைக்கும் என நம்பி தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்த விவசாயி ரமேஷ்குமார் (57) கூறுகையில் என்னிடம் எட்டு மூட்டைகள் டிஏபி உள்ளது. இன்னும் 14 மூட்டை கள் தேவை. அரசு கிட்டங்கி யில் ரூ.1,350-க்கும் கிடைக்கும் உரத்தை தனியார் கடைகளில் ரூ.2,000 கொடுத்து வாங்க வேண்டியதாகி விடும் என்றார் வேதனையுடன். தனியார் கடைகளில் டிஏபி உரம் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் விலை அதிகம். அதிக விலை கொடுத்து வாங்கினாலும் தேவையில்லாத உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கும்படி வற்புறுத்துகிறார்கள் என்கின்றனர் விவசாயிகள்.

அரசின் மெத்தனப் போக்கு

பாஜக அரசின் மெத்தனப் போக்கினால், நெல் சாகுபடி பாதிக்கப்படுகிறது. கோதுமை பயிரிடுவதும் தாமதமாகிறது. நாங்கள் என்ன செய்வதென்று தெரி யாமல் உள்ளோம் என விவசாயி கள் கண்ணீர் வடிக்கின்றனர். பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள தலைமை வேளாண்மை அதிகாரி ஹர்பன்ஸ் சிங்கை சந்திப்பதற்காக விவசாயிகள் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்துள் ளனர். அப்போது சிங் தனக்கு வந்த கைபேசி அழைப்பை ஏற்றபோது, டிஏபி பற்றாக்குறை உள்ளதை குறிப்பிட்டுப் பேசியதை தங்க ளால் கேட்க முடிந்தது என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், டிஏபி கிடைக்காவிட்டால் என்பிகே வாங்கவேண்டும். என்பிகே உரத்தை விட டிஏபி சிறந்தது என்ப தால் விவசாயிகள் அதற்காக காத்தி ருக்கின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் டிஏபி பற்றாக்குறை உள்ளது. அரசு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர். ஒன்றிய அரசு நானோ டிஏபி, நானோ யூரியாவை டிஏபியுடன் சேர்த்து விவசாயிகளுக்கு விற் பனை செய்து வருகிறது. இதை தேவைப்படுபவர்கள் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். 

தட்டுப்பாட்டை உருவாக்கும் அரசு

உரத்தட்டுப்பாடு குறித்துப் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் இந்தர்ஜித் சிங், “உரப் பற்றாக்குறை இரு மாநிலங்களிலும் பெரிய பிரச்சனை யாக மாறியுள்ளது. சில இடங்க ளில் விவசாயிகள்  அதிகாலை நான்கு மணி முதலே உரம் வாங்கு வதற்காக வந்து காத்திருக்கி றார்கள். பல மணி நேரம் காத்தி ருந்தாலும் “இல்லை” என்றே பதிலே விவசாயிகளுக்கு கிடைக் கிறது. ஹரியானாவில் பல இடங்க ளில் காவல்துறை பாதுகாப்புடன் டிஏபி  விற்கப்படுகிறது. விலையை உயர்த்தவும், உரத் தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கவும்  அரசே உரத் தட்டுப்பாட்டை  திட்டமிட்டு உரு வாக்கியுள்ளது என்றார்”.