திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநில தலைநகர் கொல் கத்தாவில் உள்ளது ஆர்.ஜி. கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவ மனையின் 4ஆவது மாடியில், அதே மருத்துவனையில் மருத்து வம் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவி வியாழனன்று சடலமாக மீட்கப்பட்டார். முதற் கட்ட விசாரணையில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட் டுள்ளது.
பணிபுரியும் மருத்துவமனை யிலேயே மருத்துவ மாணவி பாலி யல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழு வதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத் திய நிலையில், மருத்துவமனை யின் இந்த விவகாரம் தொடர்பாக 2 மருத்துவ மாணவர்கள் என 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குற்றவாளியை கொல கத்தா போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
மாணவர்கள் போராட்டம்
கொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவமனை யில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்று கூறியும் வெள்ளி யன்று காலை முதல் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்து வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து திங்களன்று பணிப் புறக்க ணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளதாக இந்திய மருத்து வர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் அவசர கால, முக்கிய மருத்துவ சேவை களைத் தவிர்த்து மற்ற பிரிவு களில் சிகிச்சை அளிக்கப் போவ தில்லை என மருத்துவர்கள் சங் கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்து வர்கள் சங்கம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ மாணவி கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரி வித்து திங்களன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளைத் தவிர மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணி யாற்ற மாட்டார்கள். உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவருக்கு உரிய நீதி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளி லும் சுகாதாரத் துறை பணியா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு விதிமுறை களை விதித்து வெளியிட வேண் டும். ஒன்றிய சுகாதாரத் துறை பாதுகாப்புச் சட்டம் விரைந்து அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தப்பட வுள்ளது” என இந்திய மருத்து வர்கள் சங்கம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயம் தேடும் திரிணாமுல் - பாஜக
மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை கொலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கா மல் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செய்ல்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகராத்தில் கருத்துப் போர் என்ற பெயரில் திரிணாமுல் - பாஜக ஆகிய கட்சிகள் அரசி யல் ஆதாய பொருளாக எடுத்துக் கொண்டு இழிவான நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக வன்முறை
மருத்துவ மாணவி கொலை யை எதிர்த்து போராட்டம் நடத்து வதாக கூறி, அரசியல் ஆதா யத்திற்காக கொல்கத்தாவின் பெரும்பாலான இடங்களில் பாஜக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளியை கைது செய்யாமல் மருத்துவமனையை இயங்க விட மாட்டோம் என மிரட்டல் விடுத்த தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மாணவி படு கொலை செய்யப்பட்டு 48 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், இன்னும் குற்றவாளியை கண்டு பிடிக்கும் விசாரணையில் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை கொல்கத்தா போலீசார் எனக் கூறி வருகின்றனர். மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இந்த விவ காரம் தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க வில்லை. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி,”பாஜகவினர் போராட்டம் நடத்துவதை விடுத்து பாலியல் வன்கொடுமை கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஒரே வாரத்தில் தண்டனையுடன் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் ஒன்றிய அர சுக்கு அறிவுறுத்த வேண்டும்” என கூறியுள்ளார். ஆனால் கொல் கத்தா மருத்துவ மாணவி தொடர் பாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.