states

img

அரசுப் பணத்தில் நாடு முழுவதும் விளம்பரம் செய்த மம்தா அரசு

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் வன் கொலையைக் கண்டித்தும், மம்தா அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததன் வெளிப்பாடே மாணவி வன்கொலை என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.மேலும் மருத்துவ மாணவி வன்கொலை விவகாரத்தை கையாண்ட விதம் சரியல்ல என நாடு முழுவதும் மம்தா அரசிற்கு எதி ராக கண்டனங்கள் கிளம்பிய நிலையில், இடது சாரிகளின் போராட்டத்தையும், அரசிற்கு எதிரான கண்டனக்குரலை திசை திருப்பவும் “அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் மசோதா (பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை)” என்ற பெயரில் அம்மாநில சட்டமன்றத்தில் புதிய மசோ தாவை இயற்றியது மம்தா அரசு.

இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், “அபராஜி தா” மசோதாவை நாட்டின் முக்கிய நாளிதழ்களில் அரசு பணத்தில் விளம்பரம் செய்து மருத்துவ மாணவி வன்கொலை பிரச்சனையை திசை திருப்பும் வேலையில் மம்தா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.