states

img

மைக்-குகள் முன்பு பேசி நடித்த பிரதமர் மோடி!

மணிப்பூர் விவகாரம் மே 3 அன்று துவங்கியது. அன்றுமுதல் 79 நாட்களாக மாநிலமே எரிந்து கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது அல்லது பெரும்பான்மை கலவரக்காரர்களுக்கு உடந்தையாக மாறியிருக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. பெண்கள்  வல்லுறவுக்கு உள்ளாக்கப்படு கிறார்கள். சொத்துக்கள் சூறையா டப்படுகின்றன. சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக மக்கள் மாறி யிருக்கின்றனர். குறிப்பாக பழங்குடி மக்கள்.  கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண் ணீர் விடும் பிரதமர் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இந்நிலையில்தான், நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில்  மணிப்பூர் விவகாரம் கிளப்பப்படும்;  நாடாளுமன்றத்தில் கேள்வி யெழுப்பி தன்னைப் பதிலளிக்குமாறு வலியுறுத்துவார்கள் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி வழக்கம் போல குறுக்கு வழியைக் கையாண் டார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு திடீரென ஊடகங்களை வர வழைத்த பிரதமர் மோடி அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்கு கள் முன்பு, 78 நாட்களுக்கு பின்னர் மணிப்பூர் குறித்து வாய் திறந்தார்.  “இந்த ஜனநாயகக் கோவிலுக்கு அருகில் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்ப வம் எந்தவொரு நாகரிக சமு தாயத்திற்கும் வெட்கக்கேடான சம்ப வம். என் இதயமே வலிக்கிறது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந் ததை மன்னிக்கவே முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமான கரமானது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்கை குறிப்பிட்டு தனி யாக எதுவும் கண்டிக்காத பிரதமர் மோடி, “அனைத்து மாநில முதல் வர்களும் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். குறிப்பாகப் பெண்கள் பாது காப்பை உறுதி செய்ய கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொத்தாம் பொதுவாக பேசினார்.  அத்துடன், மணிப்பூர், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என எந்த வொரு மாநிலமாக இருந்தாலும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களையும் கல வரப் பட்டியலில் சேர்த்துக் கொண் டார்.