states

img

இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக மகாராஷ்டிராவில் வலுக்கும் போராட்டம்

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாரா ஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 95 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவு, வாக்குப்பதிவு முடிந்த பிறகு பதி வான வாக்குகளின் எண்ணிக்கை அதிக ரிப்பு என மகாயுதி கூட்டணி வெற்றியில் பல் வேறு சந்தேகங்கள் வலுத்து வருகிறது. பாஜக பெற்ற வாக்குகள் மூலம் இவி எம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தே கம் இருப்பதாகக் கூறி சோலாப்பூர் மாவட் டத்தின் மால்ஷிராஸ் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மார்க்கட்வாடி கிராம மக்கள் வாக்குச் சீட்டு மூலம் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரினர்.

சோலாப்பூர் மாவட்ட நிர்வாகம் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த முடியாது என அறிவித்ததால் கிராம மக்கள் சார்பில் தனியாக  வாக்குச் சீட்டு மூலம் மாதிரி தேர்தல் நடத்த முயன்றனர். ஆனால் தேர்தல் ஆணையத்தின் தூண்டுதலால் மாவட்ட நிர்வாகம் மார்க்கட் வாடி கிராமத்தில் 144 தடை விதித்தது.

இந்நிலையில், மார்க்கட்வாடி கிராம மக்களைப் போன்று புனே, ஷோலாப்பூர், அகோலா ஆகிய 3 மாவட்டங்களின் பல் வேறு இடங்களில் பாஜக தலைமையி லான மகாயுதி கூட்டணியின் வெற்றியை எதிர்த்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்த வேண்டும் என போராட்டம் நடை பெற்றுள்ளது.இந்த போராட்டம் மாநி லம் முழுவதும் பரவும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

சிவசேனா (உத்தவ்) போராட்டம்

மகா விகாஸ் அகாதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாதிரி இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் அக் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்த போராட்டத்தை ஒரு இயக் கமாக மாற்ற ஆலோசித்து வருவதாக சிவசேனா (உத்தவ்) திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 “ஹம் ஹிவார்கேத்கர்” அமைப்பு போராட்டம்

சமூக ஆர்வலரும், டைனிக் தேசோ ன்னதி பத்திரிகையின் ஆசிரியருமான பிரகாஷ் போகரேவின் அழைப்பை ஏற்று,  அமராவதி மாவட்டத்தின் முக்கிய நகர மான ஹிவார்கெட்டில் அனைத்துக் கட்சி மன்றமான “ஹம் ஹிவார்கேத்கர்” சார்பில் இவிஎம் வாக்குப்பதிவு இயந்தி ரத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்றது. நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.