பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதி யில் உள்ளது ஷாஜி ஜூம்மா மசூதி. மொகலாயர்கள் ஆட்சிக் காலத் தில் கட்டப்பட்ட இந்த மசூதி, இந்து கோவி லை இடித்து கட்டியிருப்பதாக பாஜக தலைமையிலான இந்துத்துவா குழு வைச் சேர்ந்தவர்கள் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு எனக் கூறி உத்தரப்பிரதேச அரசு அதி காரிகள் குழு, காவல்துறையினருடன் ஞாயிறன்று காலை மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். அப்பொழுது நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திரண்டு, மசூ தியில் ஆய்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரி வித்தனர். அவர்களை கலைந்து செல்லும் படி உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி கள் மிரட்டினர். இடையில் மசூதி பகுதி யில் இருந்த இந்துத்துவா குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, வாக னங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங் கள் நிகழ்ந்தன. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப் பாக்கி சூடு நடத்தியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர். தனித்தீவானது சம்பல் இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்ப வங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 4 ஆக அதிகரித்துள்ளது. காயம டைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுடன், 24 மணி நேரத்தி ற்கு இணைய சேவையும் துண்டிக் கப்பட்டுள்ளது. சம்பல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள் ளது. கூடுதலாக காவலர்களும் குவிக்கப் பட்டுள்ளனர். வெளியாட்கள் சம்பலுக் குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பல் மாவட்டம் தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. வன்முறைக்கு இந்துத்துவா குண்டர்கள் காரணம் என்றாலும், உத்தரப்பிரதேச காவல் துறையினரும் இந்துத்துவா குண்டர்கள் போல துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன் முறையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.