தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம்
கடந்த 4 ஆண்டுகளாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அண்மையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் தீயணைப்பு பணியின் போது வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல கோடி மதிப்பிலான (தோராயமாக ரூ.26 கோடி) பணம் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாகவும், தீ விபத்து நேரிட்ட போது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாக வும், மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்தது என செய்திகள் வெளியானது. குறிப்பாக முதற்கட்ட விசாரணையில் இவை அனைத்துமே கணக்கில் வராத பணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது.