states

img

ஒன்றிய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது

புதுதில்லி அக்டோபர் 29 அன்று தில்லி அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி, “ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை  தில்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்து வருவதால் இத்திட்டத்தின் பயன்களை அம்மாநில மக்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதற்காக அவர்களி டம் நான் மன்னிப்பு கோரு கிறேன்” என பேசினார்.  பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆம் ஆத்மி மூத்த  தலைவரும், தில்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ்,  “மோடி அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வெறும் காகி தத்தில் மட்டுமே உள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி களில் 80% பேர் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.  ஆயுஷ்மான் பாரத் திட்டம் முழு தோல்வி காரணமாகவே பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிமீ தூரம் பயணித்து நோயா ளிகள் சிகிச்சைக்காக தில்லிக்கு வருகின்றனர்.  தில்லியில் வசிப்பவர் களுக்கும், நாட்டின் பிற பகுதி களைச் சேர்ந்தவர் களுக்கும் எந்தவித பாகு பாடும் இல்லாமல் தில்லி அர சாங்கம் தரமான  இலவச மருத்துவ சேவையை வழங்குகிறது.  ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரும்பாலும் பயனற்றது. இது காகிதத்தில் மட்டுமே உள்ளது.  ஏழைகளுக்கு உண்மை யான பலன்களை வழங்கத் தவறிவிட்டது. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக பாஜக கூறி அரசியல் செய்ய நினைக்கிறது. அவர்கள் சொல்வது போல இந்தத் திட் டம் பயனுள்ளதாக இருந்தால் பாஜக ஆளும் உத்தரப்பிர தேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநில மக்கள் தில்லிக்கு வர வேண்டிய அவ சியமில்லை” என பிரதமர் மோடியின் அரசியல் கலந்த குற்றச்சாட்டுக்கு தில்லி சுகா தார அமைச்சர் சவுரப் பரத் வாஜ் பதிலடி கொடுத்துள் ளார்.  முன்னதாக புதனன்று, “தேசிய தலைநகரின் பொது சுகாதாரப் பிரச்சனையில் பிர தமர் மோடி அரசியல் செய் கிறார்” என்று தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்ட னம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.