புதுதில்லி,பிப்.18- நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் பட்டது. இதன்படி, தேசிய அணைகள் பாது காப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக் கிழமை முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் அரசிதழில் வியாழ னன்று வெளியிட்டது.