அகமதாபாத் பிரதமர் நரேந்திர மோடி குஜ ராத் முதல்வராக இருந்த காலகட்டமான 2005இல் கட்ச் மாவட்டத்தின் கடற்கரை எல்லைக் கிராமமான நவினல் கிராமத்தின் அருகே உள்ள 472 ஹெக்டேர் நிலம் அதானி குழுமத்தின் முந்த்ரா துறை முக சிறப்புப் பொருளாதார மண்ட லத் திட்டத்திற்காக ஒதுக்கியது அம்மாநில அரசு. இந்த நிலம் ஒதுக்கீடு தொடர் பாக 2005இல் குஜராத் மோடி அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிட வில்லை. 2010இல் அதானி குழுமம் வேலி அமைக்கத் தொடங்கிய போதுதான் இந்த விவகாரம் நவி னல் கிராம மக்களுக்கு தாங்கள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் நிலம் பறிக்கப்படுவது தெரிய வந்தது. 13 ஆண்டுகளாக இழுத்தடித்த குஜராத் பாஜக அரசு அதானிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நவினல் கிராம மக்கள் கால் நடை மேய்ச்சலுக்கு பாரம்பரிய மாக பயன்படுத்தி வந்த நிலம் ஆகும். அதானிக்கு ஒதுக்கப்பட் டால் தங்களது கால்நடை தொழில் சார்ந்த விசயம் பறிபோகும் என்ப தால், குஜராத் மோடி அரசின் நில ஒதுக்கீட்டை எதிர்த்து நவினல் கிராம மக்கள் கூட்டாக 2011இல் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குத் தொடரப்பட்ட பின் குஜராத் பாஜக அரசின் விசாரணை அறிக்கை மீது நம்பிக்கை இல்லாத தால், உயர்நீதிமன்றம் உண்மை யை கண்டறியும் வகையில் விசா ரணை குழு அமைத்து அறிக்கை யை வெளியிட்டது. அதில், “அப்போதைய குஜராத் மோடி அரசாங்கம் நவினல் கிரா மத்தில் கால்நடை மேய்ச்சல் நில மாக இருந்த சுமார் 387 ஹெக்டேர் அரசு நிலத்தையும், கிராம பஞ்சா யத்துக்குச் சொந்தமான சுமார் 85 ஹெக்டேர் நிலத்தையும் அதா னிக்கு வழங்க முன்மொழிந்தது. நவினல் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. கால்நடைகள் மூலம் அப்பகுதி மக் கள் பிழைப்பு நடத்தி வரும் நிலை யில், அவற்றின் மேய்ச்சலுக்கு 320 ஏக்கர் (130 ஹெக்டேர்) பரப்பளவு தேவைப்படும். அதானி குழுமத் திற்கு ஒதுக்கப்பட்ட பிறகு கிராம மக்களுக்கு மீதமுள்ள நிலம் சுமார் 17 ஹெக்டேர் மட்டுமே என்ப தால் நவினல் கிராமத்தின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும்” என அறிக் கையில் கூறப்பட்டு இருந்தது. அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் பல்வேறு கட்ட விசார ணைக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 19 அன்று குஜராத் உயர்நீதிமன்ற நீதி பதிகள், “நவினல் கிராமத்தில் உள்ள கால்நடை மேய்ச்சல் நிலத்தை மீட் பது அரசின் கடமை. அதனால் இந்த பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்” என உத்த ரவிட்டனர். ஆனால் குஜராத் பாஜக அரசு அதானிக்கு ஆதரவாக இதுதொடர் பாக எவ்வித நடவடிக்கை எடுக்கா மல் காலம் தாழ்த்தியது. இந்த விவகாரம் மேல்முறை யீட்டு மனுவாக மீண்டும் குஜ ராத் நீதிமன்றத்திற்கு சென்ற நிலை யில், கடந்த ஜூன் 21 அன்று உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் தலைமையி லான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “ஏப்ரல் 19 அன்று வழங்கிய உத்தர வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் என்ன செய்கிறீர்கள்? விரை வான நடவடிக்கை எடுத்து பிரமா ணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் கடைசி எச்ச ரிக்கை” என குஜராத் மாநில வரு வாய்த் துறை மற்றும் கட்ச் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி யது. அதன்பிறகு ஜூலை 5 அன்று நவினல் கிராம நிலப் பிரச்சனை யை தீர்க்கவும், அதானிக்கு வழங் கிய 108 ஹெக்டேர் நிலத்தை மீட் கும் பணியை துவங்கியது குஜராத் பாஜக அரசு. அதானிக்காக ஒரு கிராமத் தையே அழிக்க நினைத்த குஜராத் பாஜக அரசிற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு குவிந்து வருகிறது.