states

ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டறியும் பரிசோதனைக் கருவி

புதுதில்லி, டிச.12- தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப் பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோ னாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியா விலும் பரவியுள்ளது.  இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் பரி சோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்கள் உருவாக்கியுள்ள னர். இந்த கருவியை வட கிழக்கு பிராந்தி யத்திற்கான பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் பிஸ்வஜோதி போர்க்காகோட்டி தலைமையிலான விஞ்ஞா னிக்குழு உருவாக்கி உள்ளனர்.  இது குறித்து டாக்டர் பிஸ்வஜோதி கூறு கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பிராந்திய ஆராய்ச்சி மையம் இணைந்து ஒமைக்ரான் மாறுபாட்டை கண்டறியவ தற்காக நீர் பகுப்பாய்வு அடிப்படையில் பரி சோதனை கருவியை வடிவமைத்து உரு வாக்கியுள்ளோம். இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் கண்டறிய முடியும். தற்போது வரை பரிசோதனை முடிவுக்கு குறைந்த பட்சம் 36 மணி நேரம் ஆகிறது. ஒமைக்ரான் மாறுபாட்டை கண்டறிய முழு மரபணு வரிசை முறைக்கு 4 முதல் 5 நாட்கள் வரை தேவைப்படுகிறது. ஒமைக்ரான் மாறு பாட்டின் குறிப்பிட்ட செயற்கை மர பணுக்களுக்கு எதிராக ஸ்பைக் புரதத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் பரி சோதனை கருவி மூலம் சோதிக்கப்பட்டது. இந்த சோதனை நூறு சதவீதம் துல்லிய மானது என்பதை காட்டியது என்று தெரி வித்தார்.