லக்னோ பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களின் நலன் சார்ந்த பணிகளை விட ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களை கட்டத் திட்டம், பசுமாடுகளுக்கு கோ சாலை அமைப்பது உள்ளிட்ட பணி களை மட்டுமே அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிறந்த குழந் தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ளியன்று இரவு 10.45 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் தீ விபத் தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாப மாக உயிரிழந்தன. 44 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. அதில் 7 குழந்தைகள் பலத்த தீக்காயத்து டனும், 16 குழந்தைகள் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றன என ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். தீக்காயத்தை தாங்கும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வா கம் கூறியுள்ளது. “மின்கசிவு கார ணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம்”என ஜான்சி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) சுதா சிங் கூறியதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. பாஜக அரசின் அலட்சியத்தால் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நிவாரணம் பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தீ விபத்தில் உயிரி ழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்க ளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என கூறினார். அதே போல உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்,”உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப் படும்” என கூறியுள்ளார். முழுமையான விசாரணை தேவை “உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் இறந்த செய்தி மிகவும் வேதனையானது. இறந்த அனைத்து குழந்தைகளின் குடும் பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்துக்கான காரணங்களை முழுமையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.