தனது 23% பங்குகளை முறைகேடாக விற்க முயற்சித்ததாக கூறி ஐபிஎல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்களுக்கு எதிராக நடிகை பிரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரிய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என டொனால்டு டிரம்ப் பலமுறை கூறுகிறார். மோடி தினமும் டுவீட் செய்கிறார் ; உரை நிகழ்த்துகிறார். ஆனால் டிரம்ப் பேசுவது குறித்து மோடி அமைதியாக இருக்கிறார். அதனால் தான் சந்தேகம் வலுக்கிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் டேனிஷ் அலி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காய்ச்சல்
உத்தவ் தாக்கரே உடன் கைகோர்க்கிறார் ராஜ் தாக்கரே
சிவசேனாவின் நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே. 2014ஆம் ஆண்டு சிவ சேனா கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், இந்தி திணிப்பு பிரச்சனை காரணமாக, 11 ஆண்டு களுக்குப் பிறகு, கடந்த மாதம் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி சிவ சேனா (உத்தவ்) கூட்டணியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் உத்தவ் தாக்கரே (சிவ சேனா தலைவர்) - ராஜ் தாக்கரே வெளிப் படையாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இத்தகைய சூழலில் நவநிர்மாண் சேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே,”சிவசேனா (உத்தவ்) கட்சியுடன் நவநிர்மாண் சேனா கூட்டணி அமைப்பது சாத்தியம் என்ற சூழல் உள்ளது. ஆனாலும் சிவசேனா (உத்தவ்) கட்சி ஒரு கணிசமான திட்ட த்தை முன்வைக்க வேண்டும். பிறகு ராஜ் தாக்கரே அது குறித்து ஒரு நல்ல முடி வை எடுப்பார்” என அவர் கூறியுள்ளார்.
சந்தீப் தேஷ்பாண்டேவின் இந்த பேச்சு சிவசேனா (உத்தவ்) - நவநிர்மாண் சேனா கூட்டணிக்கான வெளிப்படை யான அழைப்பாக அமைந்துள்ளது. அதே போல இரண்டு கட்சிகளிலும் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டு, மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்த லுக்கு முன் கூட்டணி இறுதி செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.