மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிராவின் பீட் மாவட்டத் தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மசாஜோக் கிராமத் தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் கடத்தப் பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யான வால்மிக் கரட் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். வால்மிக் கரட் மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் துறை அமைச்சராக இருக்கும் தனஞ்செய் முண்டேவின் (தேசியவாத காங்கிரஸ் (அஜித்) உதவியாளர் ஆவார். கொலை குற்ற வழக்கில் தனஞ்செய் முண்டேவு க்கும் தொடர்பு இருப்பது உறுதியா னதால், அவர் விரைவில் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மகாராஷ் டிரா சட்டமன்றத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டன. இந்நிலையில், செவ்வாயன்று தனஞ்செய் முண்டே தனது அமைச்சர் பத வியை ராஜினாமா செய்தார். முண்டே வின் ராஜினாமாவை தான் ஏற்றுக் கொண்டதாகவும், அடுத்த கட்ட நடவ டிக்கைக்காக அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித் துள்ளார்.