புதுதில்லி, பிப்.10- மோடி அரசின் பட்ஜெட்டானது, சாதாரணமான மக்களின் நலன்களை முழுமையாக புறக்கணித்து விட்ட, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான பட்ஜெட்டாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர், பி.ஆர்.நடராஜன் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்கள வையில், 2023-24ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மீதான பொது விவா தத்தில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது: உண்மையான பிரச்சனைகளான, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி இந்த பட் ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பற்றி யோ, கிராமப்புற ஏழைத் தொழிலா ளர்கள் பற்றியோ, பணவீக்கம், வேலை வாய்ப்புகள் பற்றியோ பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன்பாகக் கூறப்பட்ட, அலங்கார அறிவிப்புகளே இந்த பட்ஜெட்டிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிவிப்புகள் செயல்படுத்தப்படுவது பற்றிய விபரங்கள்தான் என்ன?
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தால், காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளன. விவசாயி களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாதா ரண மக்களின், நலன்களை முழுமை யாக புறக்கணித்து விட்ட பட்ஜெட், கார்ப்பரேட்டுகள் நலன்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 2022-23ஆம் ஆண்டுக்கான, திருத்தப் பட்ட மதிப்பீட்டின் மீது, 2023-24ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செல வின உயர்வு வெறும் 7 விழுக்காடு மட்டும்தான். இதே காலத்திற்கு, (பணவீக்கத்தினுடனான) பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 10.5 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டில், அரசின் செலவினங்கள் குறைந்துள்ளன. செலுத்தப்பட்ட வட்டியை நீக்கினால், பிறகு அரசு செலவினம், கடந்த ஆண்டைவிட 5.4 விழுக்காடு மட்டுமே உயர்ந்ததாக இருக்கும். 4 விழுக்காடு மறைமுக பணவீக்கத்தையும், ஒரு விழுக்காடு அளவிற்கான மக்கள் தொகை உயர்வையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், “மக்களை மையப் படுத்திய” பட்ஜெட் என்று அழைக்கப் படும், இந்த பட்ஜெட்டானது, பெரும் பான்மையான மக்களின் வாழ்வாதா ரத்தின் மீது மேலும் தாக்குதல்களை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளது.
வேலையின்மையின் அளவு மிகவும் உச்சத்தில் இருக்கும் போது, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற் கான ஒதுக்கீட்டை 33 விழுக்காடு இந்த பட்ஜெட் குறைத்துள்ளது. உண வுக்கான மானியத்தை 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைத்துள்ளது. அதேபோல் உர மானியம் 50 ஆயிரம் கோடி ரூபா யும், பெட்ரோலிய மானியம் 6,900 கோடி ரூபாயும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றால் பேரழிவு ஏற்பட்டும் கூட கடந்த ஆண்டு சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், 9,255 கோடி ரூபாய் செலவிடப்படா மலே உள்ளது. இது போலவே கல்விக் கான பட்ஜெட் ஒதுக்கீட்டிலும் 4,297 கோடி ரூபாயும் செலவிடப்படாமலே உள்ளது. ஏற்கனவே குறைவான ஊதியம் பெறும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்று திட்ட ஊழியர்களின் ஊதியத்தில் எந்த உயர்வையும் காணவில்லை. மொத்த செலவில் 5 விழுக்காடு மட்டுமே பாலின பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 16 விழுக்காடு மக்கள் தொகையை கொண்ட தலித்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 3.5 விழுக்காடு மட்டுமே யாகும். அதேபோன்றே 8.6 விழுக்காடு மக்கள் தொகையை கொண்ட பழங்குடி யினப் பிரிவுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2.7 விழுக்காடு மட்டுமேயாகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று இவர்கள் தம்பட்டம் அடித்தபோதிலும், பிரதமர் கிசான் நிதியத்திற்கான ஒதுக்கீடு 68 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 60 ஆயி ரம் கோடி ரூபாயாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
மூலதனச் செலவினம் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இத னால் வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், 2022-23ஆம் ஆண்டுக்கான திருத்திய மதிப்பீடுகள் காட்டுவது என்னவென்றால், மொத்த செலவினம் 9.6 விழுக்காடு அளவிற்கே உயர்ந்திருக் கிறது என்பதும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15.4 விழுக்காடு உயர்வைக்காட்டிலும் மிகவும் குறைவு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது ஊதியம் பெறு வோர் மத்தியில் சற்றே நிவாரணம் அளிக்கக் கூடும். எனினும், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், சமூகநலத் திட்டங்களுக்கான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், இவர்கள் சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தி யாவசியப் பணிகளுக்கு அதிகம் செலவு செய்யத் தள்ளப்பட்டிருக் கிறார்கள். மேலும் நிதியமைச்சர் பணக்காரர் களுக்கு அளித்திருக்கும் வரிச் சலுகை கள் அரசு வருவாயில் சுமார் 35 ஆயி ரம் கோடி ரூபாய் அளவிற்கு 2023-24 இல் இழப்பு ஏற்படுவதற்கு இட்டுச் செல்லும். எனவே, இந்த பட்ஜெட்டா னது, சாதாரணமான மக்களின் நலன் களை முழுமையாக புறக்கணித்து விட்ட, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான பட்ஜெட்டாகும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)