அகமதாபாத் விமான விபத்து மூலம் மீண்டும் அம்பலமான குஜராத் மாடல்
சரக்கு வாகனத்தில் உடல்; உடல்களை பாதுகாக்க வசதி இல்லை
அகமதாபாத் கஜராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத்திலி ருந்து 242 பேருடன் (230 பய ணிகள், 2 விமானிகள், 10 பணியா ளர்கள்) வியாழக்கிழமை அன்று மதியம் 1:39 மணி அளவில் இங்கி லாந்து தலைநகர் லண்டனை நோக்கி ஏர் இந்தியாவிற்கு சொந்த மான “போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை ஜெட் விமானம் (AI 171)”, விமான நிலையத்திற்கு அருகே மேகானி நகர் குடியிருப்புப் பகுதி யில் உள்ள பி.ஜே.மருத்துவ விடுதி யில் விமானம் விழுந்து தீப்பிடித்தது எரிந்தது. இந்த கோர விபத்தில் ஏர் இந் தியா விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் குடி யுரிமை பெற்ற விஸ்வேஷ் குமார் மட்டும் உயிர் பிழைத்தார். அதே போல மேகானி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் உணவகம் என இரண்டு கட்டிடங்களில் நேரடியாக மோதி யதில், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள், மேகானி நகர் குடி யிருப்பு வாசிகள் என மேலும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த னர். இதன்மூலம் குஜராத் விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 275-ஐ தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியகியுள்ளன. இத்தகைய சூழலில் அகமதா பாத் விமான விபத்து மூலம் குஜ ராத் மாடல் மீண்டும் அம்பலமாகி யுள்ளது. விமான விபத்து நிகழ்ந்து 4 நாட்களை கடந்துள்ள நிலை யில், டிஎன்ஏ பரிசோதனை, உடல் ஒப்படைப்பு, பலியானவர்களின் எண்ணிக்கை என அனைத்திலும் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள் ளன. இதனால் மோடியின் குஜ ராத் மாடலுக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மோடி அரசு நிவாரணம் அறிவிக்காதது ஏன்?
குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நிகழ்ந்த “ஏர் இந்தியா” விமான விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். பலர் படுகாயங்களு டன் சிகிச்சை பெற்று வரும் நிலை யில், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “ஏர் இந்தியா” விமான நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள டாடா நிறுவனம், விமானத்தில் பயணித்து உயிரிழந்த 241 பேருக்கு மட்டுமே தலா ரூ.1.25 கோடி நிவாரணம் அறிவித்துள் ளது. ஆனால் விமானம் விழுந்த இடமான மேகானி நகரில் பலி யான 34 பேருக்கு டாடா இன்னும் நிவாரணம் அறிவிக்கவில்லை. அதே போல ஒன்றிய மோடி அரசும், குஜராத் பாஜக அரசும் விமான விபத்து நிகழ்ந்து 5 நாட்களை கடந்தும் உயிரி ழந்தோரின் குடும்பத்தினருக்கு இன்னும் நிவாரணம் அறிவிக்க வில்லை. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மோடி அரசு நிவாரணம் எப்பொழுது அறி விக்கும்” என நாடு முழுவதும் கேள்விக்கணைகளுடன் கண்ட னம் குவிந்து வருகின்றன.
டிஎன்ஏ சோதனையை கண்டறிய வசதி இல்லையா?
அகமதாபாத் விமான விபத்து மூலம் பிரதமர் மோடியின் பெருமை உச்சரிப்பான குஜராத் மாடலின் மோசமான நிலைமை மீண்டும் அம்பலமாகியுள்ளது. விமான விபத்தில் பலியான வர்களின் உடல்கள் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விமான விபத்தில் பலியான 275 பேரின் உடல்கள் இன்னும் முழுமையாக டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட வில்லை. இதுவரை 30க்கும் மேற்பட்ட (தோராயமாக 40 என்று கூறப்படுகிறது) உடல்கள் மட்டுமே உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடல்களை பாதுகாக்க போதுமான வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் உடல்கள் அழுகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியகியுள்ளன. இதன்மூலம் குஜராத் மாடலின் தலைநகர் பகுதியான அகமதா பாத் அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ சோதனையை கண்டிறிய வசதி இல்லையா? உடலை பதப்படுத்த குளிர்சாதன வசதி அவ்வள வாக இல்லையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.
சரக்கு வாகனத்தில் உடல் கொண்டு செல்லப்பட்டதா?
டிஎன்ஏ மூலம் கண்டறியப்பட்ட உடல்களை சரக்கு வாகனங்க ளில் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒரு புகைப் படம் ஒன்றும் வெளியகியுள்ளது. டிஎன்ஏ செய்யப்பட்டதே வெறும் 30 உடல்கள் என வைத்துக்கொண்டால் அகமதாபாத் மருத்துவ மனையியல், குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 30 உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லையா? என சமூக வலைத் தளங்களில் கேள்விக் கணைகள் கிளம்பியுள்ளன. சமாளிப்பு டிஎன்ஏ செய்யப்பட்ட உடல்களை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படவில்லை என்றும், பெட்டிகள் மட்டுமே சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்டது என அப்பகுதி பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியகியுள்ளன. ஆனால் உண்மையில் சரக்கு வாகனங்களில் தான் சிலரது உடல்கள் ஒப்ப டைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் மட்டுமே ஆம்புலன்சில் கொண்டு செல்லப் பட்டுள்ளது என செய்திகள் வெளியகியுள்ளன.
பலி எண்ணிக்கையை கூட சரியாக கூற முடியவில்லை
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரி ழந்தனர். மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் 34 பேர் உயி ரிழந்ததாகவும்,மொத்த பலி எண்ணிக்கை 275 என சனிக்கிழமை அன்று மாலை அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு 270 பேர் உயி ரிழந்தனர் எனக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக சிஎன்என், அல்ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊட கங்கள் 290 பேர் உயிரிழந்துவிட்டனர் ; அகமதாபாத் மருத்துவ மனையில் 290 சடலப் பைகளை இருக்கிறது என கடந்த 48 மணி நேரமாக செய்தி வெளியிட்டு வருகிறது. ஆனால் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை என்னவென்று அக மதாபாத் மருத்துவமனை நிர்வாகம், குஜராத் பாஜக அரசு, ஒன்றிய மோடி அரசு என எந்த தரப்பிலும் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கொரோனா சீசனில் போல பலி எண் ணிக்கை மறைக்கப்படுகிறதா? இல்லை குஜராத் மாடல் உடல்களின் எண்ணிக்கையை சரியாக கூற முடியவில்லையா? என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.