புதுதில்லி, ஜன.2- நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும் 37.50 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப் பட்டதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிறன்று தெரி வித்தார். நவம்பர் மாதத்தில் 17.50 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப் பட்டன. 602 புகார்கள் வந்துள்ளன என்று வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்தியக் கணக்குகள் மட்டும் தடை செய்யப் பட்டுள்ளன. இந்த வாட்ஸ்அப் எண்கள் +91 என்று தொடங்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் வெளியி்ட்ட அறிக்கையில், தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படை யில் ஆறாவது மாதமாக நவம்பர் மாத அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். பயனாளிகளின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அடங்கிய இந்த அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள், தீர்வுகள், தடை செய்யப்பட்ட கணக்குகள் விவரங்கள்உள்ளன. இந்தியாவில் நவம்பரில் 17.50 லட்சம் கணக்குகள்தடை செய்யப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 500 புகார்கள் பெறப்பட்டன, 20 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கப்பட்டன என வாட்ஸ்அப் தெரிவித்தது. தவறான செய்திகளைப் பரப்புதலைத் தடை செய்தல், தகவல் பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கையின் ஒரு பகுதி என வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.