states

img

டிசம்பர் காலாண்டு அறிக்கை வெளியீடு எஸ்பிஐ லாபம் ரூ.8,432 கோடி; இந்தியன் வங்கி லாபம் ரூ.690 கோடி!

புதுதில்லி, பிப்.8- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI),  இந்தியன் வங்கி (Indian Bank) ஆகி யவை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், எஸ்பிஐ 2021 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 8 ஆயிரத்து 431 கோடியே 90 லட்சம் ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டி லும் 62 சதவிகிதம் அதிகமாகும்.  2021 டிசம்பர் காலாண்டில் எஸ்பிஐ-ன் நிகர வட்டி வருவாய் 6.5 சதவிகிதம் உயர்ந்து ரூ. 30 ஆயிரத்து 687 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் எஸ்பிஐ வழங்கிய மொத்த கடன் 8.5 சதவிகிதம் உயர்ந்து ரூ. 26 கோடியே 64 லட்சமாக அதிகரித்துள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் எஸ்பிஐ -யின் வட்டிசாரா வருவாய் 6.2 சதவிகிதம் குறைந்து ரூ. 8 ஆயி ரத்து 673 கோடியாக உள்ளது. இதேபோல, இந்தியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை, அந்த வங்கியின் நிர்வாக இயக்கு நர் எஸ்.எல். ஜெயின் வெளியிட்டுள்ளார். அதில், பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ. 690 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது என்று கூறி யுள்ளார். “இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ. 514 கோடியுடன் ஒப்பிடும் போது 34 சதவிகிதம் அதிகமாகும்” என்றும், “வட்டி சாரா வரு வாய் அதிகரித்ததன் காரணமாக மதிப்பீட்டு காலாண்டில் வங்கி யின் நிகர லாபம் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.