states

பாஜக கூட்டணி ஆளும் ஆந்திராவில் கொடூரம் தலித் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக கும்பல் பாலியல் வன்கொடுமை

பாஜக கூட்டணி ஆளும் ஆந்திராவில் கொடூரம் தலித் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக கும்பல் பாலியல் வன்கொடுமை

13 பேர் கைது ; முக்கிய குற்றவாளி தலைமறைவு

ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி  ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு  உள்ளார். ஆந்திராவில் பாஜக கூட்  டணி ஆட்சி அமைந்த பின்பு உத்த ரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் நிகழ்வதைப் போல, பாலியல் வன்முறை சம்ப வங்கள் மிக மோசமான அளவில்  அதிகரித்துள்ளன. ஆனால் ஆந்திர  மாநிலத்தின் உள்துறை அமைச் சர் (அனிதா)  பொறுப்பை கவ னிப்பவர் பெண்ணாக இருந்தா லும், அதிகரிக்கும் பாலியல் வன்  முறை சம்பவங்களை பற்றி வாய் திறக்காமல் உள்ளார். இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீ சத்யா சாய் மாவட்டத்தில் 15  வயது தலித் சிறுமி, 2 ஆண்டுகளாக  14 பேர் கொண்ட கும்பலால் பாலி யல் வன்முறைக்கு உள்ளான  அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஜூன் 9ஆம் தேதி சிறுமி கர்ப்பமான  பின்பே இந்த விவகாரம் தெரியவர, அன்றைய தினமே காவல்துறை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம், எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்  டம் மற்றும் பிஎன்எஸ் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்துள்ளது.  இதுதொடர்பாக ஸ்ரீ சத்ய  சாய் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் வி.ரத்னா கூறுகை யில்,”ஜூன் 9ஆம் தேதி அச்சம் பள்ளி வர்தன் (21), தலரி முரளி (25), படகோர்லா நந்தவர்தன் ராஜ்  (23), அரஞ்சேரு நாகராஜு (51), போயா சஞ்சீவ் (40) மற்றும் புதிதா  ராஜண்ணா (49) ஆகியோர் கைது  செய்யப்பட்டனர். தொடர்ந்து ஜூன்  10ஆம் தேதி மேலும் 7 பேர்  என மொத்தம் 13 பேர் செய்யப்பட்ட னர். அதே நேரத்தில் முக்கிய குற்ற வாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது”  என அவர் கூறினார். ஆபாச படங்களை காட்டி மிரட்டல் தலித் சிறுமிக்கு 13 வயது இருக்  கும் போதே ஆபாச படங்கள் மற்றும்  வீடியோக்களை வைத்து மிரட்டி 2 ஆண்டுகளாக மிரட்டி 14 பேர்  தொடர்ச்சியாக பாலியல் பலாத் காரம் செய்துள்ளனர். சிறுமி 8 மாத  கர்ப்பிணியான பின்பே இந்த விஷ யம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமி அனந்தபூர் மாவட்  டத்தில் உள்ள அரசு பொது மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். அவரது கர்ப்பம் முதிர்ந்த  நிலையில் இருப்பதால், கருக் கலைப்பு செய்ய வேண்டாம் என்று  மருத்துவர்களும், மாவட்ட அதி காரிகளும் முடிவு செய்துள்ளனர்.