தோழர் சீத்தாராம் யெச்சூரி பல துறைகளிலும் திறமை படைத்தவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநில செயலாளருமான முகமது சலீம் கூறினார். “டெய்லி தேஷ் சேவக்” என்னும் பஞ்சாபி நாளிதழ் 29 ஆண்டுக ளாக வெளிவந்து கொண்டிருக்கி றது. அதனைக் கொண்டாடும் விழா 2025 ஜனவரி 1 அன்று செக்டார்-டி-இல் அமைந்துள்ள பாக்னா பவன் அரங்கத்தில் நடை பெற்றது. அந்த விழா தோழர் சீத்தா ராம் யெச்சூரிக்கு அர்ப்பணம் செய்து கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரும், மேற்கு வங்க மாநில செய லாளருமான முகமது சலீம் பேசியதாவது: “தோழர் சீத்தாராம் யெச்சூரி அனைத்துத் துறைகளின் மீதும் ஆளுமை மிக்கவராவார். அவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, மிகச் சிறந்த பொருளாதார மேதை, கலாச்சாரத்துறையிலும் அபரிமிதமான அறிவினைப் பெற்ற வர். சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் மீது மிகச் சிறந்த கட்டுரைகளைத் தீட்டி இருக்கிறார். தோழர் சீத்தா ராம் யெச்சூரி, ‘இந்தியா’ கூட்டணி அமைவதற்கு மிக முக்கிய பங்கினை வகித்தார். இக்கூட்ட ணியில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளுடன் பேசி இன்றைய கால கட்டத்தில் பாசிச ஆர்எஸ்எஸ்/ பாஜக-விற்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டணி யின் அவசியத்தை அவர்களுடன் பேசி, அவர்களை இணக்கத்துடன் கூட்டணிக்குள் கொண்டு வருவ தற்கு மிகச் சிறந்த முறையில் பங்க ளிப்பினைச் செய்தவராவார். தோழர் யெச்சூரி இந்துத்துவா மத வெறி சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து முனைகளிலும் விடாப் பிடியாகத் தொடர்ந்து போராடி னார். ஆர்எஸ்எஸ்-இன் பாசிச சித்தாந்தத்தின் ஆபத்துகள் குறித்து எண்ணற்ற கட்டுரைக ளும், புத்தகங்களும் எழுதியிருக்கி றார். மிகவும் சிக்கலான பிரச்சனை களைக் கூட தோழர் யெச்சூரி சாதாரண மக்களும் புரிந்துகொள் ளக்கூடிய விதத்தில் புன்னகை யுடன் எளிமையாக முன்வைத்திடு வார். அவர் உயர்த்திப்பிடித்த சித்தாணந்தத்தை முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்கு செய்திடும் உண்மையான அஞ்சலி யாக இருக்கும்” என்று முகமது சலீம் கூறினார்.
நிலோத்பால் பாசு
விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு பேசியதா வது, “தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு மாபெரும் மார்க்சிய சிந்த னையாளர். ஆர்எஸ்எஸ்-இன் அமைப்புகளால் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தி லேயே நாடு எந்தத் திசைவழியில் சென்றுகொண்டிருக்கிறது என் பதை அவரால் உய்த்துணர முடிந்தது. ஆர்எஸ்எஸ்-க்கு எதி ரான போராட்டமும், அவர்களிட மிருந்து ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்ப தற்கு நாட்டு மக்கள் மிகப்பெரிய அளவில் போராட வேண்டியி ருக்கும்” என்றும் அவர் கூறினார்.
பஞ்சாப் அமைச்சர் லால் சந்த்
விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சர் லால்சந்த் கட்டாருசக் தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இருந்தபோது ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். சிரோன்மணி அகாலி தளத்தின் பொறுப்பு தலைவரும், மாநிலங்க ளவையின் முன்னாள் உறுப்பின ருமான சர்தார் பல்வீந்தர் சிங் பந்தர், மாநிலங்களவையில் எந்த அளவிற்கு சிறப்பாக சீத்தாராம் யெச்சூரி பணியாற்றினார் என் ்பதை நினைவுகூர்ந்தார். மதவெறி க்கு எதிராகவும் சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகவும் உழைத்த மாபெரும் தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி என்று அவர் புகழ்ந்துரைத்தார். இடதுசாரிகளின் மாபெரும் தலைவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த தோழர் பாந்த் பிரார், தோழர் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இடதுசாரி இயக் கத்திற்கே மாபெரும் தலைவர் என்று கூறினார். சுர்ஜித்தின் பங்களிப்பு தேஷ் சேவக் இதழ் சார்பில் பேசிய சிபிஎம் பஞ்சாப் மாநிலச் செயலாளரும், தேஷ் சேவாக் நாளி தழ் மேலாண் இயக்குனருமான சுக்விந்தர் சிங் சவுகான் பேசு கையில்,“தேஷ் சேவக் இதழ் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் மற்றும் சாமானிய மக்களின் பிரச்ச னைகளை உயர்த்திப்பிடிப்பதில் முக்கிய பங்காற்றி வருவதைக் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைவ தற்கு முன்பே வெளிவந்த தேஷ் சேவக் இதழை மீண்டும் கொண்டு வருவதில் தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் பங்களிப்பை விளக்கினார். தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அர்ப்பணம் செய்து ஒரு காலண்ட ரும் விழாவில் வெளியிடப்பட்டது. (ந.நி.)