புதுதில்லி, ஜூலை 30- 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சிசெய்து வரும் குஜராத் மாநி லத்தில் அதிகளவிலான மக்கள் புற்று நோய் மற்றும் காச நோய்களால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜூலை 28 அன்று மக்களவையில் பாஜக எம்.பி., நிஹால் மேக்வால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய சுகாதாரம்-குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த புற்று நோயாளிகள் பற்றிய தகவல்களின் படி, பாஜக நீண்ட காலம் ஆட்சி நடத்தி வரும் குஜராத் மாநிலத்தின் உண்மை நிலவரம் அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநில மக்களே புற்றுநோய் மற்றும் காச நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண் ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.2020 ஆம் ஆண்டு 13,92,179 நபர்களும், 2021 ஆம் ஆண்டு 14,26,447 நபர்களும், 2022 ஆம் ஆண்டு 14,61,,427 நபர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். குஜராத்தில் மட்டும் 2020 ஆம் ஆண்டு 73,382 நபர்கள், 2021 ஆம் ஆண்டு 71,507 நபர்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு 69,660 நபர்களும் பாதிக் கப்பட்டுள்ளனர்.மேலும் அதிகளவு பாதிக்கப்பட்டது பெண்கள் என்பது தெரிய வந்துள் ளது. இதே போல குஜராத் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு 1,20,560 நபர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 1,51,912 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் இது வரை 60,585 நபர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டு 3,190 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் கடந்த ஏழு ஆண்டுகளாக 20 முதல் 40 வய திற்குட்பட்ட இளைஞர்களே புற்று நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள னர் என்பது அபாயகரமான சூழல் நிலவு வதை காட்டுகிறது. மோசமான வாழ்க்கைச் சூழல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவையே அதிகளவிலான பாதிப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இதற்கு பின்புலத்தில் அதி கப்படியான போதை பொருட்கள் பயன் பாடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டு, குஜராத்தில் அதானி யின் முந்த்ரா துறைமுகம் மூலமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதிகளவிலான ஆண்கள் வாய்ப்புற்று நோயாலும் பாதிக்கப் பட்டுள்ளனர். புற்றுநோயாலும் காசநோயாலும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு முறையாக மருத்துவ வசதிகள், மறுவாழ்வு மையங்கள் என எதையும் பாஜக அரசு செய்யவில்லை. இந்த செய்திகள் மற்றும் ஒன்றிய அர சின் பதில்கள் மூலம் மக்களின் சுகாதா ரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாத பாஜகவின் குஜராத் மாடல் லட்ச ணம் அம்பலமாகியுள்ளது.