புதுதில்லி, ஜூன் 13 - இந்தித் திணிப்பு விவகாரத்தில், தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து, ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் லிமிடெட்’ நிறுவனம் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கேட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ‘நியூ இந்தியன் அஸ்யூரன்ஸ் லிமிடெட்’, அலுவலக பயன்பாட்டில் 100 சதவிகிதம் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது, “நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறு வனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக் கைகள் இந்தியில்தான் இருக்க வேண்டும். அவற்று க்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப் படும் பதில்களும் இந்தியில்தான் இருக்க வேண்டும். அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில்தான் இருக்க வேண்டும்” என்று அலுவலக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருந்தது. இது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. “அரசு நிறுவனமான ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதி எண் 5-ஐ 100 சதவிகிதம் அமலாக்கச் சொல்லி இந்திப் பயன்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால், அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று உள்ளது. ஆனால், பிரிவு 1 (ii)-ஐ தாண்டி, 5-ஆவது பிரிவை பேசும் கபடம் கண்டனத்திற்கு உரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப் பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தார்.
இந்தியை அனைத்து அலுவலகங்களிலும் நடை முறைப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வெளி யிட்ட நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சி க்கு அனைத்து மக்களும் பங்களிக்கும்போது, இந்தி க்கு மட்டும் ஒன்றிய அரசும், அதன் நிறுவனங் களும் தேவையற்ற முக்கியத்துவம் வழங்கி வருவ தாகவும், இந்தி பேசாத மொழி மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து, தனது இந்தித் திணிப்பு சுற்றறிக்கைக்காக ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்’ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம், அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளூர் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை மதிக்கும் ஒரு மாறுபட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள் ளோம்.
நமது மகத்தான நாட்டின் பரப்பளவு முழு வதும் உள்ள செழுமையான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதை கொண்டுள் ளோம். தற்செயலாக, உங்கள் உணர்வுகளை புண் படுத்தியிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.தனது டிவிட்ட ரில், “தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப் படுத்தி இருந்தால் மனதார மன்னிப்புக்கோருகிறோம். எல்லா மாநில மொழிகளையும் மதிக்கிறோம்” என நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் பதிலளித்துள்ளது என்றும் இந்தி திணிப்பிற்கு எதிரான, அலுவல் மொழி விதி களில் தமிழ்நாட்டுக்கு உள்ள தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் , A 100%, B 90%, C 55% என்று மாநிலங் களை வகைப்படுத்தி இந்தி அமலாக்க இலக்கு போடும் போது இம் மூன்று வகையிலும் வராத தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப் படும் என்று உத்தரவிடுங்கள். அதுதான் அலுவல் மொழிச் சட்டம் 1 (ii) கூறுவது. இதனை பின்பற்றவில்லையென்றால் அது “ நியூ இந்தியா இன்சூரன்ஸ்” அல்ல “இந்தி இந்தியா இன்சூரன்ஸ்” என்றும் கூறியுள்ளார்.