தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
மதுரையில் 4 நாட்களுக்குள், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பட்டியலின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது மற்றும் 5 வயது சிறுவன் உள்ளிட்டவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெருங்குடி சங்கையா கோவில் தெருவில் அப்பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் அஜீத்குமார், கணபதிகுமார், விஜயகுமார் ஆகி யோர் 27.11.2023 அன்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சுமார் இரவு 7.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த ஆர். மாரி, கே. சசிகுமார் ஆகிய சாதியவாதிகள் ஒருவரின் முகவரி யைக் குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். அதே நேரத்தில் தலித் இளைஞர் கள் லுங்கியை கீழே இறக்கிவிடா மல் மடித்துக் கட்டியிருந்ததற்காக வும் அது தங்களுக்கு அவமரி யாதையை ஏற்படுத்தி விட்டதாக வும் கருதிய சசிகுமாரும், மாரியும், சாதி ரீதியாக இழிவாகப் பேசிக் கொண்டே கத்தியால் தலித் இளை ஞர்களை தாக்கியுள்ளார். அவர் களைத் தாக்கியதோடு அவ்வழியே வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமியையும் அவரது 5 வயது பேரனையும் எந்தக் காரணமும் இன்றி கொடூரமாகத் தாக்கியுள்ள னர். படுகாயம் அடைந்த சிறுவன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடுமைகள் மனக் கண்ணில் இருந்து மறைவதற்கு முன்பு மதுரை அச்சம்பத்தில் தேவேந் திரகுல வேளாளர் இளைஞர் செல் வம் படுகொலை செய்யப்பட்டுள் ளார். கோபி, முத்து ஆகிய சாதிவெறி யர்கள் மது, கஞ்சா போதையோடு சாதி வெறியும் தலைக்கேறிய நிலை யில், அமைதியாக அமர்ந்திருந்த தேவேந்திரகுல வேளாளர் சமூ கத்தைச் சேர்ந்த செல்வம் (32 வயது) என்பவரைத் தாக்கி சாக்கடை யில் தள்ளிவிட்டதோடு கல்லைத் தலையில் தூக்கிப் போட்டு படு கொலை செய்துள்ளனர். வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இரு சாதிவெறி தாக்குதல்கள் மற்றும் படுகொலையைத் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி வன்மை யாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் கள் தொடர்கின்றன. அனைத்து சாதிகளிடமும் சாதிய பெருமித உணர்வுகளை ஏற்படுத்துகிற சாதிய பிற்போக்கு கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துவது இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதேநேரத்தில் வழக்கமான காவல்துறை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் இத்தகைய வன்கொடுமைகளை தடுப்பதற்கு போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத் தின் படி வழக்குகள் பதிவு செய்யப் படுவது துவங்கி அதன் தீர்ப்பு வழங்கப்படுவது வரை இருக்கும் இடைவெளிகளை, போதாமைக ளை போர்க்கால அடிப்படையில் அரசு சரிசெய்ய வேண்டும். பல்லா யிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கி றது. வழக்குகள் தேங்கிக்கிடப்ப தால் வன்கொடுமைக் குற்றவாளி கள் பிணையில் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். அடுத்தடுத்த குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.