சென்னை, ஆக. 8 - தரவு உள்ளீட்டாளர் (டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்) நியமனத்திற்கு பிறகு யு-வின் செயலியை பயன் படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர் பணியுடன் யு-வின் செயலியில் தடுப்பூசியை பதிவு செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் கூகுள்-ஷீட்டில் அறிக்கை களை அனுப்ப வேண்டும். இதனால் செவிலியர்கள் மன உளைச்சலுக்கு அளாகின்றனர். 2000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதால், கூடுதல் பணிச்சுமையுடன் செவிலி யர்கள் பணிபுரிகின்றனர். எனவே, செவிலியர்கள் கணினி இயக்குபவராக மாற்றுவதை கைவிட வேண்டும், தரவு உள்ளீட் டாளர் பணி நியமனம் செய்த பிறகு யு-வின் செயலியை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆக.7 - 10 வரை கோரிக்கை அட்டை அணியும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆக.10 அன்று துணை இயக்கு நர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆக.11 - 18 வரை கருப்பு அட்டை அணிந்து பணி புரிவோம் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பர மேஸ்வரி, பொதுச் செயலாளர் பா.ராணி ஆகியோர் தெரிவித்துள்ள னர்.