states

பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசியை குறைத்தது ஒன்றிய பாஜக அரசு

சென்னை, செப். 24- தமிழகத்தில் பச்சிளம் குழந்தை களுக்குப் போடப்படும் நிமோ கோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி தேவையை ஒன்றிய பாஜக அரசு பாதி யாக குறைத்துவிட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பேசிய  மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப் படும் நிமோகோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாக்க நிமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி, குழந்தைகளுக்கு 6-வது வாரம், 14-வது வாரம் மற்றும் 9-ம் மாதத்தில் இந்த தடுப்பூசியை போடவேண்டும். இந்த நிலையில், தமிழகத்தில்  தட்டுப்பாடு காரணமாக குழந்தை களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடு வதன் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார்  10 லட்சம் குழந்தைகள் பயன் பெறு வார்கள். ஒரு குழந்தைக்கே மூன்று தவணை தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அதற்கேற்ற தடுப்பூசி தற்போது கைவசம் இல்லை. இதனால்  தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது”என்கின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ கத்திற்கு ஓர் ஆண்டிற்கு 30,53,000 தடுப்பூசிகள் தேவை. இது தொடர்பாக  ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒன்றிய சுகாதார  அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப் பட்டது. ஆனால், ஒன்றிய அரசு வெறும் 6,00,000 தடுப்பூசிகளை மட்டும் தான் தற்போது வரை வழங்கி யுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் துறை கோரிய தடுப்பூசியில் பாதி அளவு கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை” என்கின்றனர்.

;