states

உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடு இன்று கொலம்பியாவில் தொடக்கம்

காலி, அக்.21- உலக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாடு (காப்16) கொலம்பியாவின் காலி நகரில் இன்று தொடங்குகிறது. 196 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற் கும் இம்மாநாட்டில் 15,000க்கும் மேற்பட்ட சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிதி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 2022ல் நடந்த கனமிங் மாண்ட்ரீல் மாநாட்டில் நாடுகள் அளித்த வாக்குறுதிகளின் நிறைவேற்றம், சூழல் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு, பன்னாட்டு நிறுவனங்களின் உயிரிக்கொள்ளையைத் தடுக்கும் முதல் உலக ஒப்பந்தம் ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030க்குள் 23-30 பில்லியன் டாலர் நிதியை இயற்கை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கில், 2025க்குள் 20 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்ற வாக்குறுதியை மேற் கத்திய நாடுகள் நிறைவேற்றுமா என் பது முக்கிய கேள்வியாக உள்ளது. “இயற்கையுடன் இணைந்து அமைதியாக வாழ்வதே இம்மாநாட் டின் முக்கிய நோக்கம்” என கொலம்பியா சூழல் அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சூசானா முகமது தெரிவித்துள்ளார்.  பழங்குடி மக்களின் நில உரிமைகளையும், சூழல் பாதுகாப்பில் அவர்களின் பங்க ளிப்பையும் உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.