states

மோடி ஆட்சியில் மக்கள் அச்சத்திலும் மன அழுத்தத்திலும் வாழ்கிறார்கள்..!

புதுதில்லி, செப்.24- இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சியில், மக்கள் மன அழுத்தத்திலும், அச்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கவலை தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது: மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. மதங்க ளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இந்தியா ஒரு மிகையான உதாரணமாகும். தற்போது உண்மையான பிரச்சனை என்னவென்றால், இந்தியாவில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்த அமைப்புடன் ஒன்றிணைந்தவர்களாக இருக் கின்றனர். இதனால், காவல்துறை எதையும் செய்யத் தயாராக இல்லை. வெறுக்கத்தக்க வகையில் பேசுபவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதால், வெறுப்பு பேச்சு இயல்பான ஒன்று தான் என்ற தைரியத்தை அந்த நபர்களுக்கு ஏற் படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் பயத்திலும், மன அழுத்தத்திலும் உள்ளனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் பயம் மட்டுமே கொள்ள முடிகிறது. நாம் தொடர்ந்து பயத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர்களும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவைகள் குறித்த அச்சத்துடனேயே இருக்கின்றனர். அமலாக்கத்துறையால் நமக்கு பயம், சிபிஐ-ஆல் நமக்கு பயம், மாநில அரசு, காவல் துறையாலும் நமக்கு பயம். எல்லாவற்றையும் பார்த்து நமக்கு பயம். அதனால் யாரும் யாரை யும் எந்தச் சூழ்நிலையிலும் நம்பத் தயாராக இல்லை. சாமனியனால் வழக்கறிஞர்களுக்கு பணம் தரமுடியாதால் அவர்களால் நீதி மன்றத்திற்கு வர முடியவில்லை. இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.

;