states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பீகாரில் அரசாங்கம் என்ற ஒன்று செயல்படுவதாகத் தெரியவில்லை. மாணவர்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் ஆகியோரின் குறைகளை கேட்க ஆளில்லை. அதனால் தான் வினாத்தாள் கசிவு போன்ற விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

தில்லிக்கு சாவர்க்கர் ஏதும் செய்யவில்லை. தில்லியிலும் அதைச் சுற்றியும் பல போராட்ட வீரர்களும் புரட்சியாளர்களும் இருந்திருக்கின்றனர். தில்லியில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பிரிவினை அரசியலை முன்னெடுக்க பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரூபாயின் மதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறது. இன்று 3 பைசா குறைந்து, அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்திய ரூபாய் மதிப்பு 85.78 ஆக வீழ்ந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்து விடும் என கடந்த 3 மாதங்களாக ஒன்றிய அரசு சொல்லி வந்தும் எதுவும் நடக்கவில்லை.

மோடி பதவி ஏற்ற 2014 முதல் இரண்டு முறை இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தை இழந்தது ஏன்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?